Wednesday, March 14, 2012

இரத்த உறவுகளுக்கு வேண்டுகோள் ...!





குற்றம் யார் செய்தாலும்
தண்டனை உண்டா ?
இல்லை அரசியல் என்று வந்து விட்டால்
குற்றத்தின் தண்டனைக்குத் தான் தண்டனையா ?

உன் கண் முன்னே
உன் உறவுகளை இழந்து இருக்கிறாயா ?
எங்கள் வலி தெரியும் ...
செல்லடிப் பட்டு வெந்துப் போய்
கை கால்கள் இழந்து இருக்கிறாயா ?
எங்கள் ரணம் புரியும் ...
அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கையில்
குண்டு மழைப் பொழிந்திருக்கிறதா ?
உந்தன் மனமும் வலியில் அழும் ...
பிஞ்சு பிள்ளை பசியால்
பல நாள் அழுது இருகிறதா ?
உன் கல் மனமும் கரையும் ...
சிறு பிள்ளை நெற்றிப் பொட்டில்
துப்பாக்கி வைத்துக் கொல்லப் பட்டிருக்கிறதா ?
பெண்களின் கொடுமைகளை
வார்த்தைகளில் வடிக்கையில்
எழுத்துகளும் கண்ணீர் சிந்துகின்றது ...

மனித நேயம் அற்ற
இத்தனை செயல்களும்
புத்தன் செய்யச் சொல்ல வில்லை ...
அத்தனையும் புத்த தேசத்தில் நடந்தது ...
அத்தனை இரத்த உறவுகளுக்கும் ,
கை எட்டும் தூரம் இருந்தும்
இரதம் சிந்துவதைக் கண்டு
கை பிசைந்து கிடந்தது ...

இனியும்
எங்கள் கண்ணீரை
நீங்கள் துடைக்க வேண்டாம் ...
எங்கள் கண்ணீரைத் துடைக்க வரும் மற்ற கரங்களையும்
நீங்கள் உடைக்க வேண்டாம்...!



2 comments:

SURYAJEEVA said...

வார்த்தைகள் கிடைக்கவில்லை ஆகவே ஷேர் செய்து உள்ளேன்

ஹேமா said...

ம்...... !