Monday, July 25, 2016

பின்தொடரும் கனவின் குரல்..








கனவின் நாயகன்
கண்ணுறங்கி போனான்
விதையாய் மாறியே
மண்ணுறங்கி போனான்
...
கனவு காணக் கற்றுத் தந்தவன்
கண்மூடும் வேளையிலும்
எங்களுக்கு வழிகாட்டிச் சென்றான்
...
ஊழல் தேசத்தில் பிறந்தோமே
எனக் கூனிக் குறுகி நிற்கையில்
நம்பிக்கை ஒளி ஊட்டிச் சென்றான்
...
உறங்காமல் கனவு காண
கற்றுகொண்டோம் உன்னிடம்
இன்று நீ ஏன் உறங்கி மறைந்து
போனாய் விண்ணிடம்
...
அறிவியலில் சிகரம் தொட்டவர்
ஆயிரமுண்டு ,
உன் போல் எங்கள்
இதயம் தொட்டவர் யாருமுண்டா ?
...
விடிவெள்ளி நீ மறைந்தாலும்
உந்தன் வெளிச்சம் மட்டும்
இதயத்தில் என்றுமுண்டு
...
உன் இரு கண்கள் கண்டது
பல கோடி மக்களின் கனவு ,
எங்கள் ஒவ்வொருவர்
இதயத்திலும்
பின்தொடரும்
உந்தன் கனவின் குரல்
...

Friday, July 1, 2016

கடவுள் தூவிய அட்சதை





அவர்கள்
வண்ணமில்லால்
புரியமுடியாமல்
கடவுள் வரைந்த
புதுமை ஓவியங்கள்
...
வளர்ந்தும்
குழந்தையாக ,
பேச்சும்
மழழையாக
...
முழுதாய் வளர்ந்த
பிறை நிலா ,
தனியோர் உலகத்தில்
அவர்கள் உலா
...

எப்போதும் சிரிக்கும்
பிள்ளை ,
சொன்னதை
திரும்பத் திரும்பச் சொல்லும்
கிளிப்பிள்ளை
...

அந்த மாசற்றப் புன்னகையில்
மகிழ்ச்சியில்லை ,
பூவுலகின் துன்பங்கள்
அந்தப் பூக்களுக்கு
புரிவதுமில்லை
...
அவர்கள்
வரமுமில்லாமல்
சாபமுமில்லாமல்
கடவுள் தூவிய அட்சதை
...