Thursday, November 10, 2011

மனிதன் உயர்திணையா ? அஃறிணை?






மனிதன் உயர்திணையா ? அஃறிணையா?
-ஒரு சிறப்புப் பட்டிமன்றம் ..


நடுவர் -கடவுள்

பேச்சாளர்கள் - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,குரங்கு .

கடவுள் :
என் இனிய உயிரினங்களே ..
நான் படைத்த உயிரினங்களில்
மனிதன் மட்டும் உயர்திணை
என்ற உயர்ந்த விதியை கொடுத்தேன் ..
ஆனால் இன்று மனிதனே
அதைக் கெடுத்தான்..
விவாத மேடையில் மனிதன் உயர்திணையா ? அஃறிணையா? என்ற கேள்வியை நிறுத்தி விட்டான் ..
முதலில் பேச வருபவர் மனிதன் ..

மனிதன் :
மனிதன் ஏன் உயர்திணை தெரியுமா ?
ஏனென்றால் அவன் மனிதன் .
புதிதாகப் படைப்பவன் ..
பலவற்றைக் கண்டுபிடிப்பவன் ..
சிந்திப்பவன் ..
சிரிப்பவன் ..
உயிரியல் குடும்பத்தில் சிறப்பவன்..
இப்படிப் பல சிறப்புடன் இருப்பவன் ..
அதனால் அவன் உயர்திணை ..

கடவுள் :
விளக்கம் அருமை . அடுத்து குரங்கு .

குரங்கு :
பூக்களைக் கூடக் கொலை செய்து
அதில் வாசம் தேடும் கூட்டம் நீங்கள் ..
சொன்னபடிக் கேளாமல்
ஒழுக்கத்தோடு வாழாமல் ,
மனம் மாறி மனம் மாறும் ,
குணம் மாறி குணம் மாறும்
கட்சி விட்டுக் கட்சி தாவும்
என்னைப் போல் குரங்கு நீங்கள் ..

கடவுள் :
ஆஹா !பிரமாதம் ..அடுத்துப் பாம்பு ..

பாம்பு :
மனம் இழந்து
குணம் இழந்து
பணம் தேடும்
பிணம் நீங்கள் ..
தன் இனம் அழித்து
அதில் வெற்றியை ருசித்து
உணவுக்காக
எங்கள் இனத்தையே உண்ணும்
என்னைப் போல் பாம்பு நீங்கள் ..

கடவுள் : மேல் சொன்னது உண்மை தான் ..அடுத்து யானை ..

யானை :
சுயநலப் பேய் பிடித்தவனுக்கு
அடிக்கடி மதமும் பிடித்துப் போகும் ..
மதம் கொண்டால்
மனதை புதைப்பான்
பிறரையும் அழிப்பான்
என்னைப் போல் ..

கடவுள் :இது நிதர்சன உண்மை .. அடுத்து நாய் ..

நாய்:
நான் கூட நன்றியோடு இருக்க
மனிதன் செய்நன்றிக் கொன்றான்
பணத்திற்காகப் பன்றியை போல்
சாக்கடையில் பிரண்டான்..
பருவத்தில் ,
பிற பலரின் பின்னல்
என்னைப் போல்
நாயாக அலைகிறான் ..!

கடவுள் : ஹா ஹா ..அடுத்துப் பூனை

பூனை :
மணமான புதிதில்
தன் துணையை 
சுத்தி சுத்தி வரும்போது
பால் கண்ட பூனை யாகிறான் ..

கடவுள் : உண்மை தான் ..அடுத்து பறவை ..

பறவை:
பெற்று வளர்த்த
தாய் தந்தையை மறக்கும் போது ..
சிறகு முளைத்து
என்னைப் போல்
கூட்டை விட்டு பறக்கும் போது
பறவையாகிறான்..
பெற்ற குழந்தையை ,
குப்பைதொட்டியில் வீசும்போது ,
தன் முட்டை
அடுத்தவர் கூட்டில் இடும்
குயிலாகிறான் ..

கடவுள் : உண்மை தான் ..அடுத்து முதலை ..

முதலை:
பணத்திற்காக
பிணத்திடம் கூடத் திருடி
பிணம் தின்னும் ஓநாயயே ..
தன் காரியம் சாதிக்க
பிறரிடம் என்னைப் போல்
முதலைக் கண்ணீர் வடிக்கிறாயே ..

கடவுள் :
அனைத்து விளக்கமும் உண்மை ,
மனிதனின் விளக்கம் தவிர ..
மனிதன் பல மிருகங்களின் கலவை ..
அதனால்
இலக்கணத்தில் ஒரு மாற்றம் தேவை ,
மனிதன்
உயர்திணை இல்லை
அஃறிணை..

8 comments:

Philosophy Prabhakaran said...

ஹி ஹி... இப்படி மல்லாக்க படுத்து துப்பிக்கிட்டா என்ன அர்த்தம்...

SURYAJEEVA said...

எதோ ஒரு பத்து சதவிகித மனிதன் செய்யும் தவறுகளால் மீதி இருக்கும் தொண்ணூறு சதவிகித மனிதனையும் தண்டித்து விட்டீர்களோ என்ற எண்ணம் மட்டும் உறுத்தலாய் என் நெஞ்சில்

Thooral said...

@Philosophy Prabhakaran s...
உண்மை தான் ..ஆனா என்ன செய்யறது ...

Thooral said...

@suryajeeva s...
ஒரு துளி விஷம் கலந்தாலும்
மொத்த பாலும் விஷம் என்ற உவமையை
மிருகங்களும் ,பறவைகளும்
மனிதன் மீது வைத்து பார்த்தால்
நாம் அனைவரும் அஃறினையே

Anonymous said...

நல்ல பதிவு... நல்ல தலைப்பு...

மூ.பழனிவேல்
http://www.manidam.wordpress.com

Thooral said...

@manidam ...
தங்கள் வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி ..:)

Thooral said...

என்னை
தங்கள் வலைத்தளத்தில்
அறிமுக படுத்தியமைக்கு
மிக்க நன்றி தோழரே ...:)

தமிழினம் ஆளும் said...

அருமையான பதிப்பு