Saturday, December 15, 2012

கடல் ...!












கடல் ,
நீர் கிடக்கும்
ஓர்
மாய உலகம் ..

கடல் ,
உலகில்
ஓர்
நீர் உலகம் ..

கடல் ,
அண்டத்தில்
மிதக்கும்
உலகில்
பதுங்கி இருக்கும்
பெரும் அண்டம் ..

கடல்
உப்பு கொண்டதால்
ரோசம் கொண்டு
அடிக்கடி பொங்கி விடுகிறது ..

கடல் ,
கடவுள்
உலகைப் படைக்க
உழைத்த உழைப்பில்
விளைந்த வியர்வை ..

கடல் ,
நிலவு
மேகம்
வானம்
முகம் பார்க்கும்
பெரும் கண்ணாடி ...

கடல்
மீன்கள் விளைந்து
கொழிக்கும்
நீர் விளை நிலம் ..

கடல் ,
சூரியன்
துயில் கொண்டு
துயில் எழும்
பள்ளியறை ..

கடல் ,
மழையின்
புயலின்
பல்லாயிரம் உயிரின்
கருவறை ..

கடல்
தன் கரைதாண்டி
சீற்றம் கொண்டால்
நம் கல்லறை ..

கடல் ,
பூமித்தட்டின்
தாளத்திற்கும் ஏற்ப
நடனமிடுகிறது
ஆழிப்பேரலையாய் ..

கடல்,
பூமியில்
இருக்கும்
ஆதிக்கச் சாதி ..

கடல்,
தன் நீரை
நிலத்தினுள்
பிரசவிக்க முயல்கிறது
அலைகளாய் ..

கடல் ,
ஒளிகூட
வெகுதூரம் உட்புக அஞ்சி
பின்வாங்கும்
மர்ம உலகம் ..

கடல்
உலகின் மொத்த
அசுத்தங்களை
சுமந்து இருக்கும்
புண்ணிய நதி ...

கடல் ,
உயிரின் ஆதாரம்
நீர் என்றால் ,
அந்த நீரின்
ஆதாரம் கடல் ..

கடல் ,
வானின்
நிறம் தொட்டு
தனக்கு அரிதாரம்
பூசிக்கொள்கிறது ..


கடல்
உலகின் அதிசயங்கள்
பல புதைந்திருக்கும்
பெரும் அதிசயம் ..!

Tuesday, December 4, 2012

மேகமும் எண்ணமும் ...!







எண்ணங்கள்
என்னவென
எண்ணுகையில்
மேகமாய் வந்து நின்றது ..


அழுத்தம்
வெப்பம்
சூழ்நிலை மாற்றத்தால்
எண்ணங்கள்
உருவாகிறது ..

திசை அறியாமல்
குறிக்கோள் இல்லாமல்
வான்வெளியில் பறக்கிறது ..

பல எண்ணங்கள்
கூடினால்
அழுத்தினால்
கண்ணீராய் வருகிறது ,
பல மேகங்கள்
ஒன்று கூடினால்
மழையாய்ப் பொழிகிறது ..


மேகங்கள்
காற்றோடு
உதிர்ந்து
கரைந்து
மறைந்து விடுகிறது ,
எண்ணங்களும்
போக்கோடு
போகையில்
மறைந்து விடுகிறது ...

சில எண்ணங்கள்
மட்டும்
மறையாமல்
உடன் வருகிறது
காற்றோடு
மிதந்து போகும்
மேகம் போல ..


மேகங்களும்
முற்றிலுமாக
மறைந்ததில்லை
வானைவிட்டு
எண்ணங்களும்
முற்றிலுமாக
மறைந்ததில்லை
நம்மை விட்டு ...


Friday, November 30, 2012

காலத்தில் கனிந்த கவிதைகள் ...!










எப்போதோ
புத்தகம் நடுவே
எழுதி வைத்த
பெயர்கள் ...

எப்போதோ
புத்தகம் கடைசியில்
வரைந்து வைத்த
படங்கள் ...

எப்போதோ
சேர்ந்து எடுத்த
புகைப்படங்கள் ...

எப்போதோ
சேர்ந்து ரசித்த
பாடல்கள் ...

எப்போதோ
சேர்ந்து போன
இடங்கள் ..

இப்போதும்
இனி எப்போதும்
போகும் பொது ,
படிக்கும் போது,
பார்க்கும் போது,
கேட்கும் போது,
இரசிக்கும் போது
கவிதையாகத் தோன்றுகிறது ..!

Friday, November 23, 2012

பெண்மையும் கவிதையும் ...!




பெண்மையே 
ஒரு கவிதை ...!

குழந்தையாக - ஹைக்கூ 

குமரியாக - காதல் கவிதை 

தோழியாக - புதுக்கவிதை 

மனைவியாக - சங்க இலக்கிய கவிதை 

தாயாக - தாய்மைக்கு மரபுக்கவிதை 

பெண்மையே ,
சமயங்களில் 
சில கவிதைகள் போல 
எத்தனை முறை படித்தாலும் 
புரிவதில்லையே  ...!

Tuesday, November 20, 2012

முகமில்லா நிலவு ..!







முகமில்லா நிலவொன்று
அமாவாசையன்று
எந்தன் வானில் பயணம் செய்தது ..
அந்த முகமில்லா நிலவை
நான் முதன் முதலாகக் கண்டேன்
காதல் கொண்டேன் ..
எந்தன் முகமறியாத
அந்த நிலவு ,
நான் ரசிப்பதைக்கண்டு
முதலில் நாணம் கொண்டாலும்
பின்னர்ப் பயம் கொண்டது ..

என்னைக் கண்டு ஏன் பயம் என்றேன் .
நீ யார் என்றாள் ...

எந்தன் வானில் நீ வந்ததின்
மாயம் என்ன என்றேன் ..

இத்தனை நாளாய்
இங்கே தான் இருந்தேன் ,

இதுவரை உன்னை நான்
எந்தன் வானில் கண்டதில்லை என்றேன் ...

நீ இன்று தான்
என்னை நோக்கின என்றாள் ..

உந்தன் நிலவில்லா
நாட்களில் தான் நான்
சஞ்சரிக்க முடியும் ..
உந்தன் வானில் நிலவு
இல்லை என்றால் தான்
என்னால் உன்னில் வரமுடியும் ...

முகமில்லா நீ
இன்று எப்படி என்
கண்ணில் பட்டாய் என்றேன் ..

பதில் சொல்ல
வந்தவளை
மேகம் சற்று
மறைத்து நின்றது ..

கண்மூடித் திறந்த நொடியில்
அந்த முகமில்லா நிலவும்
மறைந்து சென்றது ..

அன்று முதல்
ஒவ்வொரு முறையும்
வானைப் பார்க்கும் போது
அந்த முகமில்லா
நிலவைத் தேடுகிறேன் ..
அதன் பதிலுக்காக
காத்திருக்கிறேன் ...!

Monday, November 12, 2012

பட்டாசு ...!



நெருப்பை
தொட்டவுடன்
சத்தமிட்டு அலறுகிறது ..
நெருப்பை உணர்கிறதோ ..?

யுத்தங்களில்
இரத்தமும்
சதையும் தரும்
பரம்பரையில் தவறி வந்து
வீடுகளில் மகிழ்ச்சி தரும் பிறவி நீ..!

அந்த இரத்த வாடை விடாமல் ,
உருவாகையில்
ஏழைகளின்
வயிற்ரேரிச்சலில்
வெடித்துப் போகிறதோ
பட்டாசு ..!


தீண்டாமை யாரும் பார்ப்பதில்லை
உன்னிடம் ,
எழைச்சாதியின்  உழைப்பில் தான்
தீபாவளி சிரிப்பும்
மத்தாப்பும்
பணக்காரசாதியிடம் ..!

குழந்தைகளுக்கு
'காகிதங்கள்
மறைத்திருக்கம்
ஒளியும் ஒலியும்
போக்கே ...!


உண்மையாக
காசை இறுதியில்
கரியாக்கும்
பட்டாசு ..!

Thursday, November 8, 2012

நினைவூட்டுச்செய்தி




மறையாத 
மறக்காத 
நினையாத 
நினைவுகளிடம் ,
மாறாத 
குறையாத 
போகாத 
உணர்வுகள் 
ஒவ்வொரு முறையும் 
வந்து சொல்லி செல்கிறது ,
மறந்துவிடு என்று 
மறக்காமல் ...!

Monday, October 15, 2012

பிரிவு ..!






பிரிவு ..
கூட்டத்தில்
தனிமையாக்கும்
நினைவுகளில்
நனைய வைக்கும் ..
தனிமையில்
கரையவைக்கும் ..
மெழுகுவத்தி போல் ,
பிறருக்காகத் தனியே  அழவைக்கும் ..

காற்றால் மரங்களில்
இருந்து பிரித்துச் செல்லப் பட்ட இல்லை போல
திசை தெரியாமல் அலைய வைக்கும்  ...

சில நேரம்
காற்று தூக்கிச் செல்லும் விதைப் போல
புதிதாக உன்னை முளைக்க வைக்கும் ..
உளிகள் பிரித்த பாறையென புதிய சிலையாக வடிவம் கொடுக்கும் ..

மறக்காதே
தாயின் கருவறை
பிரியாமல்
உலகம் இல்லை...

வீட்டை பிரியாமல்
கல்வி இல்லை..

மேகத்தைப் பிரியாமல்
மழை இல்லை..

இமைகள் பிரியாமல்
பார்வை இல்லை..

உதடு பிரியாமல்
வார்த்தை இல்லை..

பூவின் இதழ்கள்
பிரியாமல் வாசம் இல்லை ..

துன்பம் பிரியாமல்
இன்பம் இல்லை..

பிரிவு இல்லாமல்
உறவில் வலிமை இல்லை..

நம்மைப் பிரிந்து போகாத
பிரிவு என்று எதுவும் இல்லை ..!

Saturday, October 13, 2012

தூக்கம் வராத போது உளறியவை ..!


தூக்கம் வராத போது உளறியவை ..!


ஒரே காட்சி
மாறும் உணர்வுகள் ..

சில கனம்
கூடும் அதன் கனம் ..

கண்கள் பேசும்
மொழி
கண்ணீர் ..

இதயம்
சொல்லும்
தத்துவம்
அன்பு..

இலவசமாக
கிடைத்தால்
பாசம் கூட மதிக்கப்படுவதில்லை ..

கண்ணீரும் உப்புத்தண்ணீர் தான்
உணர்ச்சி கலக்கும் வரை ..

உள்ளத்தின் வண்ணமே
வாழ்கையின்
வண்ணமோ ..?
,
நான் சரி என்ற சொல்
சில நேரம் தவறானது ..
நான் தவறு என்ற சொல்
சில நேரம் சரியானது ..

அழகு நிறமாய் இருப்பது போல்
குணமாய் இருப்பது இல்லை ...


காற்று வருமா
என இதயம் துடிதுடித்துக் காத்திருக்கிறது ..
காற்று வந்து
செல்வதை
இதயத்திடம் சொல்வதில்லை ..
காற்று வருவது தெரிந்துவிட்டால்
தன துடிப்பை நிறுத்திவிடுமோ ...


மறந்ததை நினைக்க ,
நினைக்க மறந்தேன் ..

Monday, October 8, 2012

ஜோடி no -1





காதலர்கள் 
மாறினாலும் 
எங்கள் காதல் 
மாறுவதில்லை ,
-செவியும் கைபேசியும் ...!

Saturday, October 6, 2012

ஹைக்கூ.. ..!



கவிஞர்களின்
சோம்பலுக்கு 
பிறந்திருக்கலாம் 
ஹைக்கூ.. ..!

Tuesday, October 2, 2012

அமைதி ..!




நான் உலகில் 
அகதியாய் 
திரியும்வரை ,
உலகில் நீங்களும் 
அகதியாய் திரிவீர்கள் 
- இப்படிக்கு
அமைதி ..

Saturday, September 29, 2012

மழலை ..!







வானில் தவழும்
நிலவாய்
பூமியில் நீ
உலவுவாய் ..

நீ பிறக்கையில்
உனது
அழுகைக்குப் பிறக்கிறது
எங்கள் சிரிப்பு ..

பூவாசம்
தோற்றுபோகும்
உந்தன்
பால்வாசத்திடம்..

எம் மொழியும்
ஓர் மொழிதான்
உன் வாய்மொழியில்
அது மழலைச் சொல்மொழி ..

எப்போதும்
உன் வாய்வழியே
வழியும்
ஓர் அழகியே
நீல்வீழ்ச்சி ..

உன்னோடு
கண்ணாமூச்சி
விளையாடுகையில்
எங்கள் சோகமும்
ஒளிந்து மறைகிறது ..

பருப்புக் கடைந்து
விளையாடுகையில்
உண்ணாமல்
வயுறு நிரம்புகிறது ..

நீ சிரிக்கையில்
அது மாறுகிறது
புது ராகம் ..
நீ தத்தித் தடுமாறி
நடக்கையில்
அது நடனமாய் ..
ஓடி விளையாடுகையில்
அழகு
ராட்டினமாய் ...

வானில் தவழும்
நிலவாய்
பூமியில் நீ
உலவுவாய் ..

Wednesday, September 19, 2012

தேடல் ..!





யாரையோ
தேடிக் கொண்டு
பூமியெங்கும்
அலைகிறது
காற்று..

யாரையோ
தேடிக்கொண்டு
சூரியனை
சுற்றிவருகிறது
பூமி..

இவர்கள்
இருவரின்
தேடலின்
இடைவெளியில் தான்
ஓடுகிறதோ
நமது தேடல் ...?

Saturday, September 15, 2012

அந்திவானம்..!


ஆண்கள்
வெட்கப்படும்
தருனமோ,
நிலவவள் வரவைக் கண்டு ,
முகம் சிவக்கும்
அந்திவானம்..!

Friday, September 14, 2012

பனித்துளி...!


இரவில் குளிரில் 
எப்படி வியர்கிறது,
புல்வெளியில் 
அதிகாலை பனித்துளி ...!



Monday, September 3, 2012

தோல்விகளும் பிடிக்கும் ..!






காற்றோடு
குடை கொண்டு
நான் போடும் சண்டையில்
தோற்றுப்போய் மழையில்
நனைகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

குழந்தைகளோடு
விளையாடுகையில்
நான் தோற்றுபோக
குழந்தைகள் சிரிக்கையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

சண்டையிட்ட
காதலியிடம்
தோற்றுபோய்
மன்னிப்புக்கேட்க
அவள் பொய்யாகக் கோபப்படுகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

மறக்க நினைத்ததை
மீண்டும் மீண்டும் நினைத்து
நினைவுகளிடம் தோற்றுபோகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

சில உறவுகளை
மெய்பிக்க
பொய்யாக நாம் தோற்றுபோகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

வெற்றியின்
படிக்கட்டுகளாக
தோல்விகள் மாறுகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

Friday, August 31, 2012

மனிதன் மறந்த மனித நேயம் ....!







மனம்
மனிதனிடம்
இருக்கும் வரை தான்
அவன் மனிதன்..
அவன் மனம்
பணத்தோடு சென்றால்
அவன் பிணம் ...

கோயில் கருவறையில்
கடவுளுக்கும் மனிதனுக்கும்
இடைவெளியை
பணம் தீர்மானிக்கையில்
மனிதனும்
பணத்தோடு போனான்..
பிணமாகிப் போனான் ..

அதனால்
நேசம் விசமாகிபோனது
பாசம் வேஷமாகிபோனது ..

வெறிபிடித்த மிருகமாக
சக மனிதனைத் துரத்துகிறான்..
அவன் வலியில்
வேதனையில்
ருசி கண்டு
முழு வயிறு அருந்துகிறான்..

பிறரின் கண்ணீர் மழையில்
நீச்சலடிக்க
துடிக்கிறான்...

இன வெறியில்
போர் என்ற பெயரில்
உயிர்களை வேட்டை ஆடுகிறான் ..
பணவெறியில்
அரசியல் வாதியாய்
நாட்டை ஆள்கிறான் ..
நாட்டின் வியாதி ஆகிறான்..

உயிர் மரியாதை
இழந்தது ..
மரியாதையை
தன் உயிர் இழந்தது ...

சத்தியம் கூட
இன்று
பொய்யாகிபோனது
சத்தியமாக ...!

மனதில்
இரக்கம்
இறங்கிப்போனது ..
பணக் கிறுக்கும்
ஏறிப்போனது ..

தெருவில்
பயங்கி கிடக்கும்
முதியவரை
கடந்து செல்லும் போது
மட்டும் குருடன் ஆனதால் ,
மனிதநேயமும்
இறந்து போனது ..

காம இசையிடம்
பிச்சைகேட்டு
பந்தம்
சொந்தம்
மறந்ததால்
மனித நேயமும்
மறந்து போனது..

மனிதனுக்குள்ளே
உயர்திணை அழித்து
அஃறினை வளர்த்ததால்
மனிதநேயம்
மறைந்து போனது..

கல் கண்டான்
சிலைவடித்தான்
கோயில் கொண்டான்
கடவுள் என்றான்,
ஆனால்
பக்தியை தொலைத்தான்...
மனிதநேயமும்
தொலைந்து போனது ..

தன் இனம்
அழித்து
அதன் வெற்றியில்
திளைத்ததால்
மனிதநேயமும் அழிந்து போனது..

பணம் பத்தும் செய்ய
மனித நேயமும்
பத்தோடு பதினொன்றானது..
பணத்திற்கு
இரையானது,
மனிதன் மறந்து போன
மனிதநேயம்..

Sunday, August 26, 2012

கருணைக்கு கவிதாஞ்சலி ..





கருணைக்கு வடிவம் உண்டா ?
உண்டு ..
இந்த
புனிதர்கள் வாழ்ந்த
பாரத நாட்டில்,
கருணைக்கு வடிவம் உண்டு ...!
அஃது அன்னையின்
வடிவில் உண்டு ..!


அவள்
குட்டி வட்டத்துக்குள்
தான் குழந்தையென
ஒட்டிக்கொள்ளும்
அன்னையல்ல ...
அவள்
அரசியல் பேசும்
அன்னையல்ல ..
அவள்
ஆதரவு அற்றவர்களுக்காக
அரிசியல் பேசிய
அன்னை ..

அனாதைகளின்
தனிமையை
தனியாய் நின்று
போக்கியவள் ..
வங்ககரையோரம்
கங்கைக் கரையோரம்
அனாதைகளின்
புதிய புண்ணிய ஷேத்திரம்
உருவாக்கியவள்..

கடவுள் அனுப்பிய
தேவதை அவள் ..
ஆனால்,
ஆதரவு அற்றவர்களின்
கடவுள் அவள் ..

தாய்வீடு யுகோஸ்லாவியாவை விட்டு ,
ஏழைகளை நேசித்து
அன்பை யாசித்து
கடவுளை மனதால் மணந்து ,
பாரதத் தேசம் புகுந்தவள் ..
மக்கள் சேவையில்
தேவனைக் கண்டவள் ..

தீண்டாமை நோயாம்
தொழுநோயை
தொட்டுப் பார்த்து
மருத்துவம் செய்தவள் ...

கருவறையில்
தன் தனிமையை
உணர்ந்ததால் என்னவோ ,
ஆதரவற்றவர்களுக்கு
அடைக்களம் ஆனவள் ..

அனாதை என்ற
வார்த்தையை
அனாதையாக்க
முயன்றவள் ..

மணம் கொண்டு இருந்தால்
தன் குழந்தைக்கு மட்டும் தாயாக
இருந்து இருப்பாள் ,
கருணை மனம்
கொண்டதால்
உலகிற்கே தாய் ஆனாள்..


பெயர்ச் சொல்ல
தேவை இல்லை
அவள் யாரென்று சொல்ல ..
கருணையின் பிறந்தநாளுக்கு
சிறு கவிதாஞ்சலி ...

Monday, July 9, 2012

மரங்களின் சிரிப்பொலி...!





சற்று முன் பெய்த
மழையால்
குளிபாட்டபட்டு
மாநகரச் சாலையில் இருக்கும்
புது மாப்பிள்ளையான
மரங்களின் ஓரம் நிற்கையில்,
மரங்களின் சிரிப்பொலியாகக் கேட்கிறது
மழை நின்றும்
மரங்கள் சிந்தும் தூறல்கள் ...!

Thursday, June 28, 2012

புரிதல்..!




பொம்மைகளின் பேச்சு எனக்குப் புரிவதில்லை ..
குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள்.
அதனுடன் பேசுகிறார்கள்,
சாதம் ஊட்டுகிறார்கள்,
விளையாடுகிறார்கள் ...
நானும் பொம்மையின் பேச்சை புரிந்துகொள்ள
முயற்சித்து ஒவ்வொருமுறையும் தோற்றுப் போகிறேன் ...
பொம்மைகளின் பேச்சைக் கேட்க
குழந்தையாய் மாறி கேட்டுப் பார்த்தேன்
அப்போதும் புரியவில்லை ..
குழந்தைகள் பொம்மையுடன்
விளையாடும் போது உற்றுக் கவனித்தேன்,
அப்பொழுது ஒர் உண்மை விளங்கியது..
குழந்தைகள் பொம்மையுடன் பேசும் பொழுது
பொம்மையாக மாறுகிறார்கள் பேசுகிறார்கள்..
நான் மனிதனாக இருந்து
பொம்மைகளின் பேச்சைக் கேட்க முயற்சிகிறேன் தோற்கிறேன்..

Sunday, June 24, 2012

சிறுகதை : பயணம்..!

 அந்த மலை மேலே தனிமையின் துணையோடு அருவியோரமாய் ஒரு வீடு.சுற்றும் முற்றும் இருளை மறைக்கும் பனி. காற்றை உறையவைப்பது அதன் பணி. அந்த அருவியின் இரைச்சல் , அந்த இடத்தின் அமைதியை துயில் கொள்ள செய்தது . அந்த இரவில் முழு நிலவின் ஒளி இருளோடு சண்டையிட்டுக் கொண்டுஇருந்தது .நேரமும் சாமத்தை நெருங்கியது . அந்த நேரம் அந்த  வீட்டை நோக்கி காரில் பயணம் செய்துகொண்டிருந்தேன் .கால சக்கரம் காரின் சக்கரத்தை விட மிக வேகமாக பயணம் செய்கிறது .

நேற்று நினைவாகிறது , இன்று நேற்றாகிறது ,நாளை இன்றாகிறது . காலம் ஓட்டமாய் ஓடி நிச்சயம் அதில் நம்மை வெல்கிறது .இப்போதும் அந்த சம்பவம் நேற்று நடந்தார்போல் இருக்கிறது , ஆனால் நேற்று நினைவாகி போய் பல வருடங்கள் ஆகிறது .

இந்த தனிப்பயணம், பாச சண்டையில்  நான் வென்றது .பாச சண்டையில் மட்டும் வெல்வது மிகவும் ஆபத்தானது . பாசசண்டையில் வெற்றி பெறுபவர் உண்மையில் தோற்ப்பவரேதோற்ப்பவரே உண்மையில் வெற்றி பெறுபவர். ஆயுதத்தால் போடும் சண்டையை விட அன்பினால் போடும் சண்டையில் ஏற்படும் காயம் எப்போதும் ஆறாது.

இந்தசிந்தனையில் என்மனம் இருக்கையில் மூடிய காரின் ஜன்னலின் சிறிய இடைவெளியின் வழியே , வெளியே இருக்கும் குளிர் உட்புகுந்தது . குளிரின் வெப்பம் தெரியாமல் இருக்க heater on செய்தேன் . வெளியே குளிர் ,உள்ளே வெப்பம் என்பயணம் மட்டும் அல்ல , என் மனநிலையும் கடந்த 12 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறது .அமெரிக்கா, நல்ல சம்பளம் தரும் வேலை , காதல் மனைவி என எவ்வளவு இருந்தாலும் , மனதுக்குள் நிம்மதி இல்லாமல் குற்ற உணர்ச்சியுடன் இருக்கும் எனது மன நிலையை அது குத்தி காட்டியது.ஆயினும் இந்த குளிரில் அந்த heater  இன் கதகதப்பு என் தாயின் நினைவுகளை மனதில் விட்டு சென்றது .

அம்மா !இந்த சொந்தம் நாம் அவள் கருவிலே உருவானது முதல் அவள் நம்மைவிட்டு கல்லறை சென்றாலும் நம்மைவிட்டு நீங்காத பந்தம்.என் தாய் எப்படி பட்டவள் ? எல்லா தாய் போல , நான் பிறந்த நாள் முதல் நானே அவளுக்கு வாழ்கையில் முதன்மையாகி போனேன் .எனக்கோ அவள் ஆண்டவன் தந்த விளையாட்டு பொருள் தான் .என் தாய் பற்றி நினைக்கும் போது என் தந்தையும்  வந்தார் .அப்பா ! இந்த உறவின் அருமை அவர் இருக்கும் வரை யாருக்கும் புரிவதில்லை .தந்தையின் மறைவிற்கு பிறகுதான் அனைவருக்கும் புரிகிறது அவரின் உண்மையான பெருமை .அதை நான் இப்போது மிகவும் உணர்கிறேன் .என் தந்தை பற்றி என்ன சொல்ல , தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை தோழனாய் பார்க்காமல் இன்னும் சிறு குழந்தையாகவே பார்க்கும் தந்தைகளில் என் தந்தையும் ஒருவர் .எனக்கோ அவர் என் மீது அவர் காட்டும் அதீத பாசம் சமயத்தில் வேலியாகி போனது .அந்த வேலியை உடைத்து தான் இந்த தனிமையான பயணத்திற்கு காரணம் .

இந்த பயணம் நான் மேற்கொள்வது இது 12 வது வருடம் .கருவறையில் சிலையில்லா கோயிலை தரிசிக்க வரும் பக்தனை போல் , தாய் தந்தை இல்லா இந்த வீட்டை நான் தரிசிக்க வருகிறேன் . சிலை இல்லையென்றாலும் கருவறையில் வீசும் தெய்வீக மணம் போல ,என் தாய் தந்தை இல்லையே தவிரே அவர்களின் வாசமும் , அவர்கள் என் மீது காட்டிய பாசமும் இந்த வீட்டின் அறை முழுவதும் நிறைந்திருக்கிறது. வருடத்தில் ஒரு முறையாவது இந்த வீட்டில் தனிமையில் இருந்து மீண்டும் என் தாய் தந்தையுடன் என் நினைவுகளில் வாழ்ந்து மண்ணிப்பு கேட்கிறேன் .என் வாழ்கை முடியும் வரை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் இங்கு வருவேன் என் தெய்வங்களிடம் மன்னிப்பு கேட்பேன்.

இப்பொழுது நினைத்தாலும் பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்து சென்று அந்த காட்சி என் கண்முன் நிற்கிறது .இறுதியாக நான் என் தாய் தந்தையை நான் கண்ட கனமான அந்த கடைசி தருணம் . இதோ இதே வீட்டின் வாசலில் தான் என் தந்தை என்னை வீட்டை விட்டு வெளியே போ என சொன்னார் .நான் அமெரிக்க படிக்கச் சென்று காதலும் படித்து வந்ததால் என் தந்தைக்கு என் மீது மிகவும் கோபம் . கையில் வேலை , கை நிறைய சம்பளம், அமெரிக்க வாழ்கை ,காதல் ஒருபக்கம் , தாய் தந்தையின் பாசம் , என் காதலுக்கு அவர் காட்டும் வெறுப்பும் கோபமும் மறுபக்கம் . வயதின் வேகத்தில் என் தந்தையின் கோபம் எனக்கும் கோபம் உண்டு பண்ணியது . என் தந்தையிடம் என் ஆசையை புரிய வைக்க மறந்து போய் நானும் என் தந்தை போலவே கோபமானேன்.வார்த்தைகளின் சண்டை யின் இறுதியில் என் தந்தையிடம் இருந்து வந்த இறுதி வார்த்தைகள் வீட்டை விட்டு வெளியே போ.என் தாயும் நல்ல மனைவியாக என் தந்தைக்கு நடந்து கொண்டாள்.

என் வயதின் வேகம் என்னை அமெரிக்கா அழைத்து சென்றது . என் ஆசைப்படி , அமெரிக்க வாழ்கை , காதல் மனைவி அவ்வப்போது என் தாய் தந்தையின் நினைவுகள் என ஒரு ஆண்டு மகிழ்ச்சியாக கடந்து போனது .திடீரென ஒரு நாள் தாயிடம் பேசலாம் என ஒரு ஆசை . என் வீட்டிக்கு தொலைபேசில் அழைத்தேன் .மறுமுனையில் நீங்கள் அழைக்கும் எண் தற்போது உபயோகத்தில் இல்லை என தானியங்கி குரல் மீண்டும் மீண்டும் சொன்னது .உடனே என் மனதில் சிறிது பதற்றம் . என் மாமாவை  தொலைபேசியில் அழைத்தபோது தான் தெரிந்தது , நான் எவ்வளவு பெரிய தவறு செய்தேன் என்று . என் தாய் தந்தை ஆறு மாதம் முன்பு ஒரு சாலை விபத்தில் காலமானதாகவும் ,இந்த செய்தியை என்னை தொடர்பு கொண்டு சொல்ல எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை என்றும், அதனால் தாங்களே இறுதி மரியாதை செய்ததாகவும் சொன்னார்.அவரிடம் மறுமொழி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லாமல் போனது . நான் வாழ்ந்த இந்த ஒரு வருட வாழ்க்கையே எனக்கு வெறுத்து போனது .தவறு யாருடையதாக இருந்தாலும் , நான் என் தாய் தந்தைக்கு துரோகம் செய்து விட்டேன் . அவர்களுக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதை கூட என்னால் செய்ய முடியாத பாவி ஆகிவிட்டேன் .அதை எண்ணி என் மணம் ஒவ்வொரு நிமிடமும் வெம்புகிறது.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் என் தாய் தந்தையின் நினைவு நாள் அன்று , இங்கே வருகிறேன் . என் தாய் தந்தையின் நினைவுகளை இங்கே இந்த வீட்டில் தனியாக இருந்து உணர்கிறேன் . அவர்களிடம் மண்ணிப்பு கேட்கிறேன் .தனியே அழுகிறேன் புலம்புகிறேன் . என் தாயை அவள் சுவரிசங்கள் வழிந்திருக்கும் அவள் பெரும்பாலும் இருந்த சமையல் அறையிலும் , என் தந்தையை அவர் கோபங்களும் அறிவுரை களும் நிறைத்திருக்கும் அவர் புத்தகம் படித்த அறையிலும் உணர்கிறேன் .நான் மேற்கொள்ளும் இந்த பயணம் விலை கொடுக்க முடியாத என் தாய் தந்தையின் இழப்பிற்கு எனக்கு நானே தரும் ஆறுதல்.இந்த பயணத்தில் இங்கே சில்லென வீசும் குளிர் காற்றும் என்னை வெப்பமாக குத்தி காட்டுகிறது.

Tuesday, June 5, 2012

காட்சிகளின் மறு சுழற்சி ...!

சில
நிகழ்சிகள்
நிகழ்வுகளானது ..
நிகழ்வுகள்
நினைவுகளானது..
நினைவுகள்
கனவுகளானது..!
 


சில
கனவுகள்
காட்சியானது
காட்சிகள்
கடந்து போனது ..
கடந்து போனது 
மீண்டும் 
நிகழ்ச்சி ஆனது ..!

Saturday, May 26, 2012

கவிதை...!




கவிதை,
பல நேரம்
இரவில் விழிக்கும் ..

கவிதை,
அமைதியான மனதில்
சத்தம் போடும்  ..
கவிதை,
ஒரு கழுதைப் போல
நினைவுகளைச் சுமக்கும்
திடீரென எட்டி உதைக்கும்
இலக்கியக் காகிதங்களைத் தின்னும் ..

கவிதை,
மனதோடு உறவாடி
நினைவோடு ஒளியும்  ..

கவிதை,
மனதோடும் என்னோடும்
கண்ணாமூச்சி ஆடுகிறது
அதைக் கண்டு பிடித்தால்
எழுத்தாய் வார்த்தையாய் மாறும்  ..

கவிதை,
நிலவோடும்
பெண்ணோடும்
அதிகம் உறவாடும்  ..

கவிதை,
ஆண்களைப் போல்
அழகில் மயங்கும்  ..

கவிதை
பெண்களைப்  போல்
எத்தனை முறை படித்தாலும்
புரியாமல் போகிறது ..

கவிதை,
பொய் பேசும்
சந்தம் பாடும்
மரபு நவீனம் புது என பல வேடம் போடும் ..

கவிதை..
இசையோடு மாலை சூட்டும்
பாடலை பிரசவிக்கும் ..

கவிதை
கடவுளையும் மயக்கும் ..

கவிதை
சிந்தையில் வார்த்தைகள் நோக்கி
நினைவுகளை வேள்வியாக்கி
ஒரு கவிஞன் இருக்கும் தவம் ..

கவிதை
எண்ணங்கள்
எழுத்துகளில் ஆடும்
அழகிய நாட்டியம்  ..!

Sunday, May 20, 2012

வாசம்..!





பால் வைத்த
புது நெல்மணியின்
அழகிய வாசம் ...!

பால் குடி மறவா
பிள்ளையின்
தூய்மையான பால் வாசம் ..!

மழைமண்ணில் இட்ட முத்தத்தில்
பூமிப்பெண்ணின் 
நாணமாக வரும் மண் வாசம் ..!

கிராமத்தவர்கள்
பேச்சில் வீசும்மண் வாசம் ..!

கோவில் கருவறையுள்
இருக்கும் தெய்வீக வாசம்..!

தாயின் கருவறையில்
நாம் உணராத தெய்வீக வாசம்..!

பூந்தோட்டத்தில்
காற்றோடு கை கோர்த்து
வரும் மகரந்த வாசம் ..!

சவ ஊர்வலத்தில் சவமாகிப்போகும்
தூவப்படும் பூக்களின் வாசம் ..!

நேர்மையாய்
வியர்வையாய்
உழைக்கும்
உழைப்பாளியின் வியர்வையின் வாசம் ..!

போலியாய்குளிர் அறையில்
ஏமாற்றிப் பிழைக்கும்
வஞ்சகர்கள் மேல் வரும்
அத்தரின் வாசம் ..!

கட்டிலில் பூக்கள்
ஆசை தந்து
பத்து மாதம் களித்து
ஓசைதரும்
மோகத்தின் வாசம் ..!

இறந்தவர் உடலில் பூக்கள்
உலகின் நிலையாமையை
எடுத்துச் சொல்லும்
மரணத்தின் வாசம் ..!

இவற்றில் எது காட்டுகிறது
வாசத்தின் உண்மையான வாசம் .. ?

Tuesday, April 10, 2012

எனக்கான கனவுகள் எனக்கு வந்ததே இல்லை ...!





எனக்கான கனவுகள்
எனக்கு வந்ததே இல்லை ...
என்னைச் சுற்றி இருப்பவர்கள்
எனக்கான கனவுகள் காண்கிறார்களாம்..
சொல்கிறார்கள் ..



எனக்கான கனவுகள்
என்னில் வருவதற்காக
இன்று வரை காத்திருகிறேன்..


ஆசைகள் இருந்தும்
கனவுகள் வருவதில்லை ..
தங்கக் கூண்டுக்குள்
சிறைப்பட்ட குயில் எப்படிச் சந்தோசமாய்ப் பாடும் ..

என்ன வேடிக்கை இது ?
அவர்கள் மற்றவர் கனவுகளைச் சுமந்ததர்காக
என்னை அவர்கள் கனவுகளைச் சுமக்க சொல்கிறார்கள் ..

எனக்கான எனது கனவுகள்
இன்று வரை
எனது மனதின் அடியில்
சிறைபட்டு விடுதலைக்காக
காத்திருகிறது ...

எனது கனவை
அடுத்தவர் தோளில்
சுமத்தி வைக்க நான் விரும்பவில்லை ..
எனது கனவை
அவர்களில் நான் காண விரும்பவில்லை ..

எனது தூக்கத்தில் கூட
உள்ளுக்குள் தூங்கிக்கிடக்கும்
எனது கனவு விழித்துக்கொள்ள
பயப்படுகிறது ...
அதனால் ,
எனக்கான கனவுகள்
எனக்கு வந்ததே இல்லை ...

Saturday, March 17, 2012

இமைக்க மறந்த விழிகள் ...!




அந்தக் காட்சி ,
கடந்து போன ஒரு நொடியில்
என் இமை பிடித்து நிறுத்தி விட்டது ..
பதியம் போட்ட நெல்மணியாய்
நெஞ்சில் பதிந்து விட்டது ..

அந்த அழகை
என்ன வென்று சொல்ல ...
அழகுக்கு உவமைச் சொல்லும்
அழகு அது ..
எந்தக் கல் நெஞ்சும்
அதைக் கண்டால்
இலகும் அதில் ..

என் விழிக்குள் இருக்கும்
கருமணிகளும் சிறு குழந்தையென
துள்ளி விளையாடியது
அந்த அழகை ரசிக்கையில் ...

கருப்புக் கல் பதிந்த வெள்ளி
மோதிரமாய்க் கண்கள் ..!
பூவின் புன்முறுவலாய்
மெல்லிய சிர்ரிப்பு ...!
காற்றின் சொல் கேட்கும்
பூவாய்த் தலை யாட்டு ..!
கோபம் காட்டிச் சிவக்கும்
அழகிய மூக்கு ..!
பூச்சூடும் பூவாய்
அவள் அணிந்தப் பூ ..!
காற்றில் ஓவியம்
வரையும் அழகிய விரல்கள் ...!
சிரிப்பாய் இசைத்து வரும்
காம்போதி ராகம் ..!

இப்படி
இமைக்க மறந்த விழிகள்
அனைத்தையும் மறந்தன
அந்தக் குழந்தையின் புன்சிரிப்பை
ரசிக்கையில் ...!

Wednesday, March 14, 2012

இரத்த உறவுகளுக்கு வேண்டுகோள் ...!





குற்றம் யார் செய்தாலும்
தண்டனை உண்டா ?
இல்லை அரசியல் என்று வந்து விட்டால்
குற்றத்தின் தண்டனைக்குத் தான் தண்டனையா ?

உன் கண் முன்னே
உன் உறவுகளை இழந்து இருக்கிறாயா ?
எங்கள் வலி தெரியும் ...
செல்லடிப் பட்டு வெந்துப் போய்
கை கால்கள் இழந்து இருக்கிறாயா ?
எங்கள் ரணம் புரியும் ...
அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கையில்
குண்டு மழைப் பொழிந்திருக்கிறதா ?
உந்தன் மனமும் வலியில் அழும் ...
பிஞ்சு பிள்ளை பசியால்
பல நாள் அழுது இருகிறதா ?
உன் கல் மனமும் கரையும் ...
சிறு பிள்ளை நெற்றிப் பொட்டில்
துப்பாக்கி வைத்துக் கொல்லப் பட்டிருக்கிறதா ?
பெண்களின் கொடுமைகளை
வார்த்தைகளில் வடிக்கையில்
எழுத்துகளும் கண்ணீர் சிந்துகின்றது ...

மனித நேயம் அற்ற
இத்தனை செயல்களும்
புத்தன் செய்யச் சொல்ல வில்லை ...
அத்தனையும் புத்த தேசத்தில் நடந்தது ...
அத்தனை இரத்த உறவுகளுக்கும் ,
கை எட்டும் தூரம் இருந்தும்
இரதம் சிந்துவதைக் கண்டு
கை பிசைந்து கிடந்தது ...

இனியும்
எங்கள் கண்ணீரை
நீங்கள் துடைக்க வேண்டாம் ...
எங்கள் கண்ணீரைத் துடைக்க வரும் மற்ற கரங்களையும்
நீங்கள் உடைக்க வேண்டாம்...!



Friday, March 9, 2012

நான் எழுதும் கவிதை உனக்குப் புரியாது ...!







நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்குப் புரியாது 

என் மனக்கண்ணாடியை
அணிந்து பார்த்தாலும் தெரியாதுஎன் மனக்காட்சிகள்
எனக்கே சரியாக
தெரியாத நிலையில்
அதைப் படம் பிடித்து
கவிதையாய்ப் படைக்கையில்
உனக்கு மட்டும் தெரியுமா ?
எனது கவிதை புரியுமா ?

என் கவிதை புரியாததால்
நான் வருத்தப்பட முடியாது ...

என் வருத்தங்களை
கவிதையாய்ப் படைக்கையில்
அதுவும் பிறர்க்குப் புரியவில்லையென
வருத்தப்பட மாட்டேன் ...

என் சிந்தையில்
சிந்தியவைகளை
எழுத்துக்களாய் கோர்த்து
நினைவுகளை வார்த்து
உணர்ச்சிகளைச் சேர்த்து
கவிதை தூரலாய்த் தூவுகிறேன் ...

அந்தத் தூறலில்
நனைவது
உனக்குப் பிடிக்கவில்லை என்பதால்
எனது கவிதை தூறல் நின்று விடாது ...

என்ன செய்வது ,
உடையும் நிலையில் இருக்கும்
அணையின் மீது பெய்யும்
கார்கால மேகம் போல 
சில நேரம் எனது கவிதை...

மீண்டும் சொல்கிறேன்
நான் எழுதும் கவிதை
நிச்சயம் உனக்குப் புரியாது ...

Friday, February 24, 2012

வேண்டும்..!வேண்டாம்...!





தூங்காத இரவுகள் வேண்டும்
விடியாத இரவுகள் வேண்டாம்
களையாத கனவுகள் வேண்டும்
மாறாத கனவுகள் வேண்டாம்

உதிராத பூக்கள் வேண்டும்
வாசமில்லா பூக்கள் வேண்டாம்
சாய்க்காத புயல் வேண்டும்
வீசாத தென்றல் வேண்டாம்

களையாத மேகம் வேண்டும்
தூராத மேகம் வேண்டாம்
தாலாட்டும் பாடல் வேண்டும்
செவி பிய்க்கும் பாடல் வேண்டாம்

கருணைக் கொண்ட கண்கள் வேண்டும்
கலங்கும் கண்கள் வேண்டாம்
ஆறுதல் தரும் வார்த்தை வேண்டும்
காயம் தரும் வார்த்தை வேண்டாம்

நிழல் தரும் மரமாக மனது வேண்டும்
மரம் உதிரும் சருகாக மனம் வேண்டாம்
விடையாக வாழ்க்கை வேண்டும்
புதிராக வாழ்க்கை வேண்டாம்

பிறரை நேசிக்கும் பக்தி வேண்டும்
தன்னை மறக்கும் பக்தி வேண்டாம்
மனிதர்களாக மனிதர்கள் வேண்டும்
பொய்யாக மனிதர்கள் வேண்டாம்

மாசற்ற அன்பு வேண்டும்
பற்றற்ற அன்பு வேண்டாம்
நினையாத நினைவுகள் வேண்டும்
வலியாக நினைவுகள் வேண்டாம்

பிரியாத உறவுகள் வேண்டும்
உயிரற்ற உறவுகள் வேண்டாம்
வேண்டாதவையும் சில நேரம் வேண்டும்
வேண்டுபவையும் சில நேரம் வேண்டாம்

Sunday, January 29, 2012

ஒரே பார்வையும் ஒரே ஒரு புன்னகையும் ..!






ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை ஜாலங்கள் செய்கிறது ...

பல்வேறு சூழ்நிலைகளில்
பல்வேறு தருணங்களில்
பல்வேறு காலங்களில்
எத்தனை உணர்ச்சிகளுக்கு
தாயாகிறது ...

முதல் பார்வையில் ,
மயக்கம் 
பரவசம் 
வெட்கம் 
தயக்கம் 
வியப்பு  சந்திப்பு ...

ஒவ்வொரு சந்திப்பிலும் ,
பூரிப்பு 
சிரிப்பு 
மகிழ்ச்சி 
ஆறுதல் 
ஆசை  ...

ஒவ்வொரு ஆசையிலும்  ,
மோகம் 
தாகம் 
காமம் தணியாத காதல்  ...

ஒவ்வொரு காதலிலும்  ,அன்பு மகிழ்ச்சி
உடைமையுணர்வு 
பயம்
ஊடல்  ...

ஒவ்வொரு ஊடலிலும் ,
கோபம் 
சோகம் 
திகைப்பு 
மோதல் கூடல்  ...

ஒவ்வொரு கூடலிலும்,இன்பம்
உச்சம்
களிப்பு
 மகிழ் மிகு கண்ணீர் முன்னம்  விட
அதிகக் காதல்  ..

இறுதிச் சந்திப்பில் ,
அதிர்ச்சி 
திகைப்பு 
காயம் 
தனிமை  ...

தனிமையில்,
சிரிப்பு 
சோகம் 
வலி  மிகு கண்ணீர் 
வெறுமை  நினைவுகள் ...

ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை உணர்வுகள்  ...!

Friday, January 27, 2012

அலைகளின் பேச்சு






கரை தொட்டு
பின் செல்லும் அலைகள் 
எதோ ஒன்றை
கரையில் 
நுரையாய் எழுதிச் செல்கிறது ..

எழுதிச் செல்லும் பொழுது
ஏதோ ஒன்றை கரையிடம்
சத்தமாகச் சொல்லி விட்டுச்  செல்கிறது ..

அந்த
அலைகளின் எழுத்துக்களை
படித்துவிட முயற்சிக்கிறேன் ..
புரியவில்லை ...

அந்த
அலைகளின் சத்தத்தைக் கேட்டு
அதன் மொழியை
புரிந்து விட முயற்சிகிறேன்
விளங்கவில்லை ..

தரையாக இல்லாததால்
என்னவோ
அதை
படிக்கவோ
கேட்கவோ முடியவில்லை ..

முயன்றுப் படிக்கும் பொழுதுகளில் 
அந்த எழுத்துக்கள் யாவும்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு அர்த்தம் தருகிறது

ஒவ்வொரு முறை
அந்தப் பேச்சைக் கேட்கும் பொழுதும்
அது வெவ்வேறாக ஒலிக்கிறது ...

சிறிதாய் எழுத்துக்கள்
புரிந்த வேளையில்
அலைகள் வந்து அதை அழித்துவிட்டு
புதிதாக எழுதிச் செல்கிறது ...

சற்று 
புரியும் பொழுது 
அது தன் பேச்சை
நிறுத்திக் கொள்கிறது  ...

கடைசிவரை அலைகளின்
பேச்சும் எழுத்தும்
புரியவில்லை ..

உலகிலிருக்கும் பல்வேறு
புரியாத மர்மங்கள் போல்
இந்த
பேச்சும் எழுத்தும்
மர்மமாகவே உள்ளது ...!

Monday, January 2, 2012

மௌனத்தின் சத்தங்கள் ...!







மௌனம் சத்தம் போடுமா ?
சற்று மௌனமாகச் சிந்தித்ததில்
அது ஆம் என்றது சத்தமாக ..

என்னை விட்டுப் போய்விடுவாயா ?
எனக் காதலியிடம் கேட்டக் கேள்விக்கு
பதிலாய் வந்த மௌனம்இன்றும் மனதில் சத்தம் போடுகிறது ...

எம் இன மக்கள்
எட்டிய தூரத்தில் இருந்தும்
கொத்து கொத்தாய்ச் சாகையில்
இங்கு அமைதி காத்த மக்களின் மௌனம்
ஈழத்தில் குழந்தையின் அழுகையாய்க் கேட்கிறது ..

பேச வேண்டிய தருணங்களில்
நான் காத்த மௌனங்களே
இன்று வரை நினைவில் சத்தம் போடுகிறது ..

நான் திட்டிப் போன வேளையில்
மௌனம் காத்த தந்தையின் மௌனங்கள்
என்னைச் சத்தமாகக் குத்திக் காட்டுகிறது ..

உயிரெனக் கலந்த உறவுகள்
உயிரற்றச் சவமாகக் கிடக்கையில்
என்னில் கண்ணீராய்ச் சத்தம் போடுகிறது ..
இப்பொழுது சொல்லுங்கள்
மௌனம் சத்தம் போடும் தானே ..