Saturday, December 15, 2012

கடல் ...!












கடல் ,
நீர் கிடக்கும்
ஓர்
மாய உலகம் ..

கடல் ,
உலகில்
ஓர்
நீர் உலகம் ..

கடல் ,
அண்டத்தில்
மிதக்கும்
உலகில்
பதுங்கி இருக்கும்
பெரும் அண்டம் ..

கடல்
உப்பு கொண்டதால்
ரோசம் கொண்டு
அடிக்கடி பொங்கி விடுகிறது ..

கடல் ,
கடவுள்
உலகைப் படைக்க
உழைத்த உழைப்பில்
விளைந்த வியர்வை ..

கடல் ,
நிலவு
மேகம்
வானம்
முகம் பார்க்கும்
பெரும் கண்ணாடி ...

கடல்
மீன்கள் விளைந்து
கொழிக்கும்
நீர் விளை நிலம் ..

கடல் ,
சூரியன்
துயில் கொண்டு
துயில் எழும்
பள்ளியறை ..

கடல் ,
மழையின்
புயலின்
பல்லாயிரம் உயிரின்
கருவறை ..

கடல்
தன் கரைதாண்டி
சீற்றம் கொண்டால்
நம் கல்லறை ..

கடல் ,
பூமித்தட்டின்
தாளத்திற்கும் ஏற்ப
நடனமிடுகிறது
ஆழிப்பேரலையாய் ..

கடல்,
பூமியில்
இருக்கும்
ஆதிக்கச் சாதி ..

கடல்,
தன் நீரை
நிலத்தினுள்
பிரசவிக்க முயல்கிறது
அலைகளாய் ..

கடல் ,
ஒளிகூட
வெகுதூரம் உட்புக அஞ்சி
பின்வாங்கும்
மர்ம உலகம் ..

கடல்
உலகின் மொத்த
அசுத்தங்களை
சுமந்து இருக்கும்
புண்ணிய நதி ...

கடல் ,
உயிரின் ஆதாரம்
நீர் என்றால் ,
அந்த நீரின்
ஆதாரம் கடல் ..

கடல் ,
வானின்
நிறம் தொட்டு
தனக்கு அரிதாரம்
பூசிக்கொள்கிறது ..


கடல்
உலகின் அதிசயங்கள்
பல புதைந்திருக்கும்
பெரும் அதிசயம் ..!

Tuesday, December 4, 2012

மேகமும் எண்ணமும் ...!







எண்ணங்கள்
என்னவென
எண்ணுகையில்
மேகமாய் வந்து நின்றது ..


அழுத்தம்
வெப்பம்
சூழ்நிலை மாற்றத்தால்
எண்ணங்கள்
உருவாகிறது ..

திசை அறியாமல்
குறிக்கோள் இல்லாமல்
வான்வெளியில் பறக்கிறது ..

பல எண்ணங்கள்
கூடினால்
அழுத்தினால்
கண்ணீராய் வருகிறது ,
பல மேகங்கள்
ஒன்று கூடினால்
மழையாய்ப் பொழிகிறது ..


மேகங்கள்
காற்றோடு
உதிர்ந்து
கரைந்து
மறைந்து விடுகிறது ,
எண்ணங்களும்
போக்கோடு
போகையில்
மறைந்து விடுகிறது ...

சில எண்ணங்கள்
மட்டும்
மறையாமல்
உடன் வருகிறது
காற்றோடு
மிதந்து போகும்
மேகம் போல ..


மேகங்களும்
முற்றிலுமாக
மறைந்ததில்லை
வானைவிட்டு
எண்ணங்களும்
முற்றிலுமாக
மறைந்ததில்லை
நம்மை விட்டு ...