Monday, October 15, 2012

பிரிவு ..!






பிரிவு ..
கூட்டத்தில்
தனிமையாக்கும்
நினைவுகளில்
நனைய வைக்கும் ..
தனிமையில்
கரையவைக்கும் ..
மெழுகுவத்தி போல் ,
பிறருக்காகத் தனியே  அழவைக்கும் ..

காற்றால் மரங்களில்
இருந்து பிரித்துச் செல்லப் பட்ட இல்லை போல
திசை தெரியாமல் அலைய வைக்கும்  ...

சில நேரம்
காற்று தூக்கிச் செல்லும் விதைப் போல
புதிதாக உன்னை முளைக்க வைக்கும் ..
உளிகள் பிரித்த பாறையென புதிய சிலையாக வடிவம் கொடுக்கும் ..

மறக்காதே
தாயின் கருவறை
பிரியாமல்
உலகம் இல்லை...

வீட்டை பிரியாமல்
கல்வி இல்லை..

மேகத்தைப் பிரியாமல்
மழை இல்லை..

இமைகள் பிரியாமல்
பார்வை இல்லை..

உதடு பிரியாமல்
வார்த்தை இல்லை..

பூவின் இதழ்கள்
பிரியாமல் வாசம் இல்லை ..

துன்பம் பிரியாமல்
இன்பம் இல்லை..

பிரிவு இல்லாமல்
உறவில் வலிமை இல்லை..

நம்மைப் பிரிந்து போகாத
பிரிவு என்று எதுவும் இல்லை ..!

Saturday, October 13, 2012

தூக்கம் வராத போது உளறியவை ..!


தூக்கம் வராத போது உளறியவை ..!


ஒரே காட்சி
மாறும் உணர்வுகள் ..

சில கனம்
கூடும் அதன் கனம் ..

கண்கள் பேசும்
மொழி
கண்ணீர் ..

இதயம்
சொல்லும்
தத்துவம்
அன்பு..

இலவசமாக
கிடைத்தால்
பாசம் கூட மதிக்கப்படுவதில்லை ..

கண்ணீரும் உப்புத்தண்ணீர் தான்
உணர்ச்சி கலக்கும் வரை ..

உள்ளத்தின் வண்ணமே
வாழ்கையின்
வண்ணமோ ..?
,
நான் சரி என்ற சொல்
சில நேரம் தவறானது ..
நான் தவறு என்ற சொல்
சில நேரம் சரியானது ..

அழகு நிறமாய் இருப்பது போல்
குணமாய் இருப்பது இல்லை ...


காற்று வருமா
என இதயம் துடிதுடித்துக் காத்திருக்கிறது ..
காற்று வந்து
செல்வதை
இதயத்திடம் சொல்வதில்லை ..
காற்று வருவது தெரிந்துவிட்டால்
தன துடிப்பை நிறுத்திவிடுமோ ...


மறந்ததை நினைக்க ,
நினைக்க மறந்தேன் ..

Monday, October 8, 2012

ஜோடி no -1





காதலர்கள் 
மாறினாலும் 
எங்கள் காதல் 
மாறுவதில்லை ,
-செவியும் கைபேசியும் ...!

Saturday, October 6, 2012

ஹைக்கூ.. ..!



கவிஞர்களின்
சோம்பலுக்கு 
பிறந்திருக்கலாம் 
ஹைக்கூ.. ..!

Tuesday, October 2, 2012

அமைதி ..!




நான் உலகில் 
அகதியாய் 
திரியும்வரை ,
உலகில் நீங்களும் 
அகதியாய் திரிவீர்கள் 
- இப்படிக்கு
அமைதி ..