Saturday, September 29, 2012

மழலை ..!







வானில் தவழும்
நிலவாய்
பூமியில் நீ
உலவுவாய் ..

நீ பிறக்கையில்
உனது
அழுகைக்குப் பிறக்கிறது
எங்கள் சிரிப்பு ..

பூவாசம்
தோற்றுபோகும்
உந்தன்
பால்வாசத்திடம்..

எம் மொழியும்
ஓர் மொழிதான்
உன் வாய்மொழியில்
அது மழலைச் சொல்மொழி ..

எப்போதும்
உன் வாய்வழியே
வழியும்
ஓர் அழகியே
நீல்வீழ்ச்சி ..

உன்னோடு
கண்ணாமூச்சி
விளையாடுகையில்
எங்கள் சோகமும்
ஒளிந்து மறைகிறது ..

பருப்புக் கடைந்து
விளையாடுகையில்
உண்ணாமல்
வயுறு நிரம்புகிறது ..

நீ சிரிக்கையில்
அது மாறுகிறது
புது ராகம் ..
நீ தத்தித் தடுமாறி
நடக்கையில்
அது நடனமாய் ..
ஓடி விளையாடுகையில்
அழகு
ராட்டினமாய் ...

வானில் தவழும்
நிலவாய்
பூமியில் நீ
உலவுவாய் ..

Wednesday, September 19, 2012

தேடல் ..!





யாரையோ
தேடிக் கொண்டு
பூமியெங்கும்
அலைகிறது
காற்று..

யாரையோ
தேடிக்கொண்டு
சூரியனை
சுற்றிவருகிறது
பூமி..

இவர்கள்
இருவரின்
தேடலின்
இடைவெளியில் தான்
ஓடுகிறதோ
நமது தேடல் ...?

Saturday, September 15, 2012

அந்திவானம்..!


ஆண்கள்
வெட்கப்படும்
தருனமோ,
நிலவவள் வரவைக் கண்டு ,
முகம் சிவக்கும்
அந்திவானம்..!

Friday, September 14, 2012

பனித்துளி...!


இரவில் குளிரில் 
எப்படி வியர்கிறது,
புல்வெளியில் 
அதிகாலை பனித்துளி ...!



Monday, September 3, 2012

தோல்விகளும் பிடிக்கும் ..!






காற்றோடு
குடை கொண்டு
நான் போடும் சண்டையில்
தோற்றுப்போய் மழையில்
நனைகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

குழந்தைகளோடு
விளையாடுகையில்
நான் தோற்றுபோக
குழந்தைகள் சிரிக்கையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

சண்டையிட்ட
காதலியிடம்
தோற்றுபோய்
மன்னிப்புக்கேட்க
அவள் பொய்யாகக் கோபப்படுகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

மறக்க நினைத்ததை
மீண்டும் மீண்டும் நினைத்து
நினைவுகளிடம் தோற்றுபோகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

சில உறவுகளை
மெய்பிக்க
பொய்யாக நாம் தோற்றுபோகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

வெற்றியின்
படிக்கட்டுகளாக
தோல்விகள் மாறுகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!