Friday, January 18, 2013

பாரம்








சுமந்து விட்டு
செல்லும்படி
சொல்லிப்போனது
சேதியடி ..

சேதி சொன்ன
தேதி படி
நடக்கத் தொடர்ந்தது
ஓர் விதி ..

தொடர்ந்தது
விதி
கேள்விக்குப் பதிலாய்
வரும் கேள்வியாய் ...

கேள்விக்குள் இருப்பது
எதுவான தெரியாமல்
கேள்வியின் இறுதி
பதிலைத் தேட ..
தொடங்கியது ..

அந்தக் கேள்வியின்
ஆழம் புரியாமல்
அதில்
உள்ளிறங்கியது ..

அதன் ஆழம்
கடலின் ஆழமாக
புதை மணலின் வேகமாக
இருந்தது ..

பதில்
தேடி
இறங்கியது
அந்தக் கேள்வியின்
ஆழத்திலேயே
மூழ்கி மறைந்தது ...

அந்தச் செய்தியோ
காற்றோடு சென்று
சுமந்துவிட்டு
செல்லும்படி
மற்றொருவரிடம்
சொல்லி
மீண்டும்
தன் பயணம் தொடங்கியது .

Monday, January 14, 2013

கனவு ..!





தூக்கத்தின் 
பிள்ளையல்ல 
கனவு ..

ஏக்கத்தின்
பிள்ளையே 
கனவு ..

கரிசல் பூமியின் 
விரிசலின் இடைவெளியில் 
ஒட்டிக்கொண்டு 
துளிர்விடும் 
சிறு மொட்டாக 
யாவரிடமும் 
துளிர்வது 
கனவு ..

சிறைபட்ட 
ஆசைகளின் 
உணர்சிகளின் 
விடுதலை 
கனவு ..

அலைகள் 
கடலிலிருந்து 
கரை சேர்வதாய் 
உணர்சிகள் 
ஆசைகள் 
கரை சேர்வது 
கனவு ..

செலவில்லாமல் 
நினைப்பது 
நடப்பது 
கனவு ..


ஏழையின் 
கருப்புவெள்ளை 
வாழ்க்கை 
வண்ணமாவது 
கனவு ..


கண்கள் இல்லாத 
குருடரும்
காட்சி காண்பது 
கனவு ..

குருடனின் 
கனவில் 
வண்ணமில்லை 
ஆனால் 
எண்ணமுண்டு 
ஓசையுண்டு 
அதில் 
ஆசையுண்டு ..

கனவின் 
வண்ணம் 
மனதின் 
எண்ணம் ...

வண்ணங்கள் 
மட்டுமல்ல 
எண்ணங்களாலும்  ஆனது 
கனவு ..

இரவின் மீது 
தூக்கம் கொண்ட காதலுக்கு 
பிறக்கும் பிள்ளை 
கனவு ..

ஆசைகள் 
உணர்ச்சியால் 
மனதின் சுவரில் 
வரையும் ஓவியம் 
கனவு ..

இலட்சியங்கள் 
துளிர்விட 
விதையாக 
வேர்ராக 
இருப்பது 
கனவு ..

முடிவில்லாமல் 
தொடர்வது 
தொடக்கமில்லாமல் 
முடிவது 
கனவு ...


Saturday, January 12, 2013

கலியுகப் பொங்கல் ....






மழையில்லை
நதியில்லை
நீரில்லை
வயலில்
நெற்கதிரில்லை ..
விவசாயியின்
வயித்தெரிச்சலில்
பச்சரிசி அச்சுவெல்லம் பொங்களாம்
பொங்கலோ பொங்கல் ...!


நதியெல்லாம்
எங்கோ அடபட்டு போச்சு ..
அங்கே மணல் கொண்டு
இங்கே அப்பர்ட்மெண்ட் ஆச்சு ..
நீங்க மணலெடுக்க வெட்டுன
குழியில விவசாயம் சமாதியாச்சு ...
விவசாயி தவிர
அனைவருக்கும்
பச்சரிசி அச்சுவெல்லம் பொங்களாம்
பொங்கலோ பொங்கல் ...!

சூரியன அழைச்சு
செங்கல் அடுக்கி
மண்பான எடுத்து
நெருப்ப மூட்டி
கரும்பு கட்டி
எங்க பொங்கல்
பொங்கலயே ..

நாலு சவுதுக்குள்ள
காஸ் அடுப்புல
பிரசர் குக்கர் வச்சு ,
உங்க பொங்கல்குள்ள
எங்க பொங்கலும்
பொங்க முடியாம
வெம்பிக் கிடக்குதடா ..
பொங்கலோ பொங்கல் ..

தமிழர் திருநாளோ
தமிழ் புத்தாண்டோ
பொங்கல் பண்டிகையோ
எதுவானாலும்
எங்க பொங்கல் பொங்கலயே ..
வாய் நீட்டி
ஓட்டு கேட்டு எந்த அரசியலுக்கும்
எங்க உரிமை மீட்க துப்பில்லையே ..

தல குனியும்
சமஞ்ச பொண்ணா
முன்ன நிக்குமடா
நெல்மணி வயலில ..
இப்ப
ஏன்டா விவசாயியானேனு
நிக்குறேண்டா ஒத்தையில ..
pizza தின்னும் தமிழனுக்கு
"சோத்த திங்கலாம்
காச முடியாது " னு சொன்ன புரியல ..
எங்க பொங்கல்
பொங்கவும் வழியில்ல ...

Thursday, January 3, 2013

இடைவெளி ...!






இணைப்புகள் 
அர்த்தமற்ற போது ,
இடைவெளி 
அழகிய 
அர்த்தம் தருகிறது ..

வார்த்தைகளின் 
இடைவெளி 
முழுமையான சொற்தொடர் 
அமைக்கும் ..


பூவின் 
இதழ்களின் 
இடைவெளியில் 
வாசம் 
பூமிக்குள் பிரசவிக்கும் ..

இமைகளின் 
இடைவெளியில் 
நம் பார்வை 
இருக்கும் ..

இதழ்களின் 
இடைவெளியில் 
நம் பேச்சு 
பிறக்கும் ..

நட்பிற்கும் 
காதலிற்கும் 
இடையில் 
இருக்கும் 
இடைவெளி 
அழகாய் 
இருக்கும் 
புது 
உறவாய் 
பிறக்கும் ...

சில 
உறவுகளில் 
இடைவெளி 
அதை மேலும் 
பிணைக்கும் ...

இரு 
கரைகளின் 
இடைவெளியில் 
நதிகளும் 
பயணிக்கும் ...

இரு 
துருவங்களின் 
இடைவெளியில் 
உலகம் 
இயங்கும்  ..

இரவிற்கும் 
பகலிர்க்கும் 
இடையே 
அழகிய 
மாலை 
விழிக்கும் ...

வானம் 
பூமிக்கு 
இடையே உள்ள 
இடைவெளியில் 
காற்றும் 
பயணிக்கும் ...


மூளைக்கும் 
மனிதனுக்கும் 
இடையே உள்ள 
இடைவெளியில் 
சுயநலமும் 
பொதுநலமும் 
இருக்கும் ... 


பூமியில் 
யாரோ 
ஒருவர் விட்டுச்சென்ற 
இடைவெளியில் 
நாம் இருப்போம் ..

இடைவெளி 
தூரமில்லை ..
அது 
உறவுகளுக்கு 
பாரமில்லை ...
மொத்தத்தில் 
அது 
வரமுமில்லை 
சாபமுமில்லை ...