Saturday, January 12, 2013

கலியுகப் பொங்கல் ....






மழையில்லை
நதியில்லை
நீரில்லை
வயலில்
நெற்கதிரில்லை ..
விவசாயியின்
வயித்தெரிச்சலில்
பச்சரிசி அச்சுவெல்லம் பொங்களாம்
பொங்கலோ பொங்கல் ...!


நதியெல்லாம்
எங்கோ அடபட்டு போச்சு ..
அங்கே மணல் கொண்டு
இங்கே அப்பர்ட்மெண்ட் ஆச்சு ..
நீங்க மணலெடுக்க வெட்டுன
குழியில விவசாயம் சமாதியாச்சு ...
விவசாயி தவிர
அனைவருக்கும்
பச்சரிசி அச்சுவெல்லம் பொங்களாம்
பொங்கலோ பொங்கல் ...!

சூரியன அழைச்சு
செங்கல் அடுக்கி
மண்பான எடுத்து
நெருப்ப மூட்டி
கரும்பு கட்டி
எங்க பொங்கல்
பொங்கலயே ..

நாலு சவுதுக்குள்ள
காஸ் அடுப்புல
பிரசர் குக்கர் வச்சு ,
உங்க பொங்கல்குள்ள
எங்க பொங்கலும்
பொங்க முடியாம
வெம்பிக் கிடக்குதடா ..
பொங்கலோ பொங்கல் ..

தமிழர் திருநாளோ
தமிழ் புத்தாண்டோ
பொங்கல் பண்டிகையோ
எதுவானாலும்
எங்க பொங்கல் பொங்கலயே ..
வாய் நீட்டி
ஓட்டு கேட்டு எந்த அரசியலுக்கும்
எங்க உரிமை மீட்க துப்பில்லையே ..

தல குனியும்
சமஞ்ச பொண்ணா
முன்ன நிக்குமடா
நெல்மணி வயலில ..
இப்ப
ஏன்டா விவசாயியானேனு
நிக்குறேண்டா ஒத்தையில ..
pizza தின்னும் தமிழனுக்கு
"சோத்த திங்கலாம்
காச முடியாது " னு சொன்ன புரியல ..
எங்க பொங்கல்
பொங்கவும் வழியில்ல ...

2 comments:

அருணா செல்வம் said...

நன்றாக கவிதையில் பொங்கி இருக்கிறீர்கள்.

பொங்கல் வாழ்த்துக்கள்.

Thooral said...

@அருணா செல்வம்...

நன்றி சகோ ...
பொங்கல் வாழ்த்துக்கள்