Friday, January 18, 2013

பாரம்








சுமந்து விட்டு
செல்லும்படி
சொல்லிப்போனது
சேதியடி ..

சேதி சொன்ன
தேதி படி
நடக்கத் தொடர்ந்தது
ஓர் விதி ..

தொடர்ந்தது
விதி
கேள்விக்குப் பதிலாய்
வரும் கேள்வியாய் ...

கேள்விக்குள் இருப்பது
எதுவான தெரியாமல்
கேள்வியின் இறுதி
பதிலைத் தேட ..
தொடங்கியது ..

அந்தக் கேள்வியின்
ஆழம் புரியாமல்
அதில்
உள்ளிறங்கியது ..

அதன் ஆழம்
கடலின் ஆழமாக
புதை மணலின் வேகமாக
இருந்தது ..

பதில்
தேடி
இறங்கியது
அந்தக் கேள்வியின்
ஆழத்திலேயே
மூழ்கி மறைந்தது ...

அந்தச் செய்தியோ
காற்றோடு சென்று
சுமந்துவிட்டு
செல்லும்படி
மற்றொருவரிடம்
சொல்லி
மீண்டும்
தன் பயணம் தொடங்கியது .

No comments: