Thursday, January 3, 2013

இடைவெளி ...!






இணைப்புகள் 
அர்த்தமற்ற போது ,
இடைவெளி 
அழகிய 
அர்த்தம் தருகிறது ..

வார்த்தைகளின் 
இடைவெளி 
முழுமையான சொற்தொடர் 
அமைக்கும் ..


பூவின் 
இதழ்களின் 
இடைவெளியில் 
வாசம் 
பூமிக்குள் பிரசவிக்கும் ..

இமைகளின் 
இடைவெளியில் 
நம் பார்வை 
இருக்கும் ..

இதழ்களின் 
இடைவெளியில் 
நம் பேச்சு 
பிறக்கும் ..

நட்பிற்கும் 
காதலிற்கும் 
இடையில் 
இருக்கும் 
இடைவெளி 
அழகாய் 
இருக்கும் 
புது 
உறவாய் 
பிறக்கும் ...

சில 
உறவுகளில் 
இடைவெளி 
அதை மேலும் 
பிணைக்கும் ...

இரு 
கரைகளின் 
இடைவெளியில் 
நதிகளும் 
பயணிக்கும் ...

இரு 
துருவங்களின் 
இடைவெளியில் 
உலகம் 
இயங்கும்  ..

இரவிற்கும் 
பகலிர்க்கும் 
இடையே 
அழகிய 
மாலை 
விழிக்கும் ...

வானம் 
பூமிக்கு 
இடையே உள்ள 
இடைவெளியில் 
காற்றும் 
பயணிக்கும் ...


மூளைக்கும் 
மனிதனுக்கும் 
இடையே உள்ள 
இடைவெளியில் 
சுயநலமும் 
பொதுநலமும் 
இருக்கும் ... 


பூமியில் 
யாரோ 
ஒருவர் விட்டுச்சென்ற 
இடைவெளியில் 
நாம் இருப்போம் ..

இடைவெளி 
தூரமில்லை ..
அது 
உறவுகளுக்கு 
பாரமில்லை ...
மொத்தத்தில் 
அது 
வரமுமில்லை 
சாபமுமில்லை ...


No comments: