Sunday, April 21, 2013

காகிதங்கள் கொண்ட கோபம் ..!








காகிதங்களும்
பேனாவும்
என் மீது கோபம் கொண்டன ..!


கவிதையை
வடம் பிடித்து வர ,
அவற்றை மறந்து
நான் கணினியில்
பயணம் செய்வதால் ..!


என் கணினி மீது அவை
பொறாமை கொள்கிறது ..
தாய் மருமகள் மீது
கொண்ட பொறாமை போல,
நேற்று வந்த நீ
என் இடத்தை நிரப்பி விட்டாயென ..
எல்லாக் கணவன்களைப் போல்
நானும் இந்தப் பொறாமையை இரசிக்கிறேன் ..!


Sunday, April 14, 2013

நிழல்கள்...!





மரங்கள் யாவும் 
நிலத்தின் மீது 
மயங்கி விழுந்தன- நிழலாக ,
வெயிலின் கொடுமை 
தாங்க முடியாமல் ...!

Thursday, April 11, 2013

குற்றஉணர்ச்சி ...!




யாருடைய கோபமென
தெரியவில்லை ..
என் கண்களை
கலங்க வைக்கிறது இந்தத் தூசி ...!