இந்த உலகில்
அதிகமாக சொல்லப்படும்
பொய்களில் சில
"நன்றாக இருக்கிறேன்"
"கவலைப்படாதே, ஒன்றும் ஆகாது"
"நான் இருக்கிறேன்"
சில நேரம்
பொய்கள் தான் நம்மை
உண்மையாகவே வாழ வைக்கிறது ...
எண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...!
இந்த உலகில்
அதிகமாக சொல்லப்படும்
பொய்களில் சில
"நன்றாக இருக்கிறேன்"
"கவலைப்படாதே, ஒன்றும் ஆகாது"
"நான் இருக்கிறேன்"
சில நேரம்
பொய்கள் தான் நம்மை
உண்மையாகவே வாழ வைக்கிறது ...
குழந்தைகள் கைபிடித்த வாஞ்சையில்
மயங்கி வானில் பறந்துபோன பலூன்
நிச்சயம் சொர்க்கம் சேர்ந்திருக்கும்
குழந்தைகளுடன் கண்ணாமூச்சி
விளையாடும் பொழுது
முதலில் மறைவது நம் கவலை
சாலையோர அனாதை பொம்மைகளை
வீட்டிற்கு அழைத்து வந்து பெயர் சூட்டி
ஆதரவு அளிக்கிறார்கள் குழந்தைகள்
குழந்தைகளின்
கிறுக்கல்களும் மழலைச் சொற்களும்
கடவுளின் கையெழுத்தும் மொழியும்
குழந்தைகளின் பக்தி
மெழுகுவர்த்திக்கும்
குத்து விளக்குக்கும்
வேறுபாடு அறியாது
குழந்தைகளின் ஜன்னல்கள்
கதவுகளும் தடுப்புகளும் அற்றவை
அங்கே காற்றுக்கு எந்தத் தடையும் இல்லை
நதியில் விளையாடிய காட்சி,
ஒரு கருவாட்டின் கண்ணில்
கடைசி நினைவாகப்
பொதிந்திருக்கலாம்
மேகத்திலிருந்து நதியின்
காய்ந்த மடியில் விழுந்து
மணலில் புதைந்து மடிந்த
மழைத்துளி
இறுதியாகத் தேடியிருக்கலாம்
பால் சுரக்காத மார்பைப் போல
நீரில்லா நதியை விடாமல் அறுக்கும்
மணல் லாரி
தன் கிளீனர் இங்கே
என்றோ குளிப்பாட்டிய நினைவில்
ஒரு நொடி வந்திருக்கலாம்
ஏரிக்கரையோர அடுக்குமாடிக்குடியிருப்புச்
சுவரில் உறங்கிக் கொண்டிருக்கும் மணல்
ஏரிக்கரை நீர்ச் சலசலக்கும்
சத்தம் கேட்டு ஏங்கியிருக்கலாம்
இரவில் தன் முகம் பார்க்கும்
நீண்டக் கண்ணாடியைத்
தேடுகையில் நினைத்திருக்கலாம்
சேய்க் காணாத தாய் போல
முகத்துவாரத்தில் அலையும்
கடலின் தேடலிலிருக்கலாம்
நாகரீகத் தொட்டில் தந்து வளர்த்தத் தாயை
வளர்ச்சியெனக் காரணம் தந்து
மனிதன் இன்று மறந்தது ஏனோ