Friday, August 31, 2012

மனிதன் மறந்த மனித நேயம் ....!







மனம்
மனிதனிடம்
இருக்கும் வரை தான்
அவன் மனிதன்..
அவன் மனம்
பணத்தோடு சென்றால்
அவன் பிணம் ...

கோயில் கருவறையில்
கடவுளுக்கும் மனிதனுக்கும்
இடைவெளியை
பணம் தீர்மானிக்கையில்
மனிதனும்
பணத்தோடு போனான்..
பிணமாகிப் போனான் ..

அதனால்
நேசம் விசமாகிபோனது
பாசம் வேஷமாகிபோனது ..

வெறிபிடித்த மிருகமாக
சக மனிதனைத் துரத்துகிறான்..
அவன் வலியில்
வேதனையில்
ருசி கண்டு
முழு வயிறு அருந்துகிறான்..

பிறரின் கண்ணீர் மழையில்
நீச்சலடிக்க
துடிக்கிறான்...

இன வெறியில்
போர் என்ற பெயரில்
உயிர்களை வேட்டை ஆடுகிறான் ..
பணவெறியில்
அரசியல் வாதியாய்
நாட்டை ஆள்கிறான் ..
நாட்டின் வியாதி ஆகிறான்..

உயிர் மரியாதை
இழந்தது ..
மரியாதையை
தன் உயிர் இழந்தது ...

சத்தியம் கூட
இன்று
பொய்யாகிபோனது
சத்தியமாக ...!

மனதில்
இரக்கம்
இறங்கிப்போனது ..
பணக் கிறுக்கும்
ஏறிப்போனது ..

தெருவில்
பயங்கி கிடக்கும்
முதியவரை
கடந்து செல்லும் போது
மட்டும் குருடன் ஆனதால் ,
மனிதநேயமும்
இறந்து போனது ..

காம இசையிடம்
பிச்சைகேட்டு
பந்தம்
சொந்தம்
மறந்ததால்
மனித நேயமும்
மறந்து போனது..

மனிதனுக்குள்ளே
உயர்திணை அழித்து
அஃறினை வளர்த்ததால்
மனிதநேயம்
மறைந்து போனது..

கல் கண்டான்
சிலைவடித்தான்
கோயில் கொண்டான்
கடவுள் என்றான்,
ஆனால்
பக்தியை தொலைத்தான்...
மனிதநேயமும்
தொலைந்து போனது ..

தன் இனம்
அழித்து
அதன் வெற்றியில்
திளைத்ததால்
மனிதநேயமும் அழிந்து போனது..

பணம் பத்தும் செய்ய
மனித நேயமும்
பத்தோடு பதினொன்றானது..
பணத்திற்கு
இரையானது,
மனிதன் மறந்து போன
மனிதநேயம்..

Sunday, August 26, 2012

கருணைக்கு கவிதாஞ்சலி ..





கருணைக்கு வடிவம் உண்டா ?
உண்டு ..
இந்த
புனிதர்கள் வாழ்ந்த
பாரத நாட்டில்,
கருணைக்கு வடிவம் உண்டு ...!
அஃது அன்னையின்
வடிவில் உண்டு ..!


அவள்
குட்டி வட்டத்துக்குள்
தான் குழந்தையென
ஒட்டிக்கொள்ளும்
அன்னையல்ல ...
அவள்
அரசியல் பேசும்
அன்னையல்ல ..
அவள்
ஆதரவு அற்றவர்களுக்காக
அரிசியல் பேசிய
அன்னை ..

அனாதைகளின்
தனிமையை
தனியாய் நின்று
போக்கியவள் ..
வங்ககரையோரம்
கங்கைக் கரையோரம்
அனாதைகளின்
புதிய புண்ணிய ஷேத்திரம்
உருவாக்கியவள்..

கடவுள் அனுப்பிய
தேவதை அவள் ..
ஆனால்,
ஆதரவு அற்றவர்களின்
கடவுள் அவள் ..

தாய்வீடு யுகோஸ்லாவியாவை விட்டு ,
ஏழைகளை நேசித்து
அன்பை யாசித்து
கடவுளை மனதால் மணந்து ,
பாரதத் தேசம் புகுந்தவள் ..
மக்கள் சேவையில்
தேவனைக் கண்டவள் ..

தீண்டாமை நோயாம்
தொழுநோயை
தொட்டுப் பார்த்து
மருத்துவம் செய்தவள் ...

கருவறையில்
தன் தனிமையை
உணர்ந்ததால் என்னவோ ,
ஆதரவற்றவர்களுக்கு
அடைக்களம் ஆனவள் ..

அனாதை என்ற
வார்த்தையை
அனாதையாக்க
முயன்றவள் ..

மணம் கொண்டு இருந்தால்
தன் குழந்தைக்கு மட்டும் தாயாக
இருந்து இருப்பாள் ,
கருணை மனம்
கொண்டதால்
உலகிற்கே தாய் ஆனாள்..


பெயர்ச் சொல்ல
தேவை இல்லை
அவள் யாரென்று சொல்ல ..
கருணையின் பிறந்தநாளுக்கு
சிறு கவிதாஞ்சலி ...