Saturday, December 15, 2012

கடல் ...!












கடல் ,
நீர் கிடக்கும்
ஓர்
மாய உலகம் ..

கடல் ,
உலகில்
ஓர்
நீர் உலகம் ..

கடல் ,
அண்டத்தில்
மிதக்கும்
உலகில்
பதுங்கி இருக்கும்
பெரும் அண்டம் ..

கடல்
உப்பு கொண்டதால்
ரோசம் கொண்டு
அடிக்கடி பொங்கி விடுகிறது ..

கடல் ,
கடவுள்
உலகைப் படைக்க
உழைத்த உழைப்பில்
விளைந்த வியர்வை ..

கடல் ,
நிலவு
மேகம்
வானம்
முகம் பார்க்கும்
பெரும் கண்ணாடி ...

கடல்
மீன்கள் விளைந்து
கொழிக்கும்
நீர் விளை நிலம் ..

கடல் ,
சூரியன்
துயில் கொண்டு
துயில் எழும்
பள்ளியறை ..

கடல் ,
மழையின்
புயலின்
பல்லாயிரம் உயிரின்
கருவறை ..

கடல்
தன் கரைதாண்டி
சீற்றம் கொண்டால்
நம் கல்லறை ..

கடல் ,
பூமித்தட்டின்
தாளத்திற்கும் ஏற்ப
நடனமிடுகிறது
ஆழிப்பேரலையாய் ..

கடல்,
பூமியில்
இருக்கும்
ஆதிக்கச் சாதி ..

கடல்,
தன் நீரை
நிலத்தினுள்
பிரசவிக்க முயல்கிறது
அலைகளாய் ..

கடல் ,
ஒளிகூட
வெகுதூரம் உட்புக அஞ்சி
பின்வாங்கும்
மர்ம உலகம் ..

கடல்
உலகின் மொத்த
அசுத்தங்களை
சுமந்து இருக்கும்
புண்ணிய நதி ...

கடல் ,
உயிரின் ஆதாரம்
நீர் என்றால் ,
அந்த நீரின்
ஆதாரம் கடல் ..

கடல் ,
வானின்
நிறம் தொட்டு
தனக்கு அரிதாரம்
பூசிக்கொள்கிறது ..


கடல்
உலகின் அதிசயங்கள்
பல புதைந்திருக்கும்
பெரும் அதிசயம் ..!

1 comment:

Yaathoramani.blogspot.com said...

கடல்
உப்பு கொண்டதால்
ரோசம் கொண்டு
அடிக்கடி பொங்கி விடுகிறது .//

வித்தியாசமான அருமையான சிந்தனை
ஒரு சிட்டிகை உப்புக்கே மனிதர்களுக்கு
இவ்வளவு ரோஷம் பொத்துக் கொண்டு வருகிறது
உப்பாகவே இருக்கும் கடலுக்கு ரோஷம் அதிகம்
இருப்பது இயற்கையே
கடல் குறித்த விரிந்த சிந்தனை மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்