Saturday, October 13, 2012

தூக்கம் வராத போது உளறியவை ..!


தூக்கம் வராத போது உளறியவை ..!


ஒரே காட்சி
மாறும் உணர்வுகள் ..

சில கனம்
கூடும் அதன் கனம் ..

கண்கள் பேசும்
மொழி
கண்ணீர் ..

இதயம்
சொல்லும்
தத்துவம்
அன்பு..

இலவசமாக
கிடைத்தால்
பாசம் கூட மதிக்கப்படுவதில்லை ..

கண்ணீரும் உப்புத்தண்ணீர் தான்
உணர்ச்சி கலக்கும் வரை ..

உள்ளத்தின் வண்ணமே
வாழ்கையின்
வண்ணமோ ..?
,
நான் சரி என்ற சொல்
சில நேரம் தவறானது ..
நான் தவறு என்ற சொல்
சில நேரம் சரியானது ..

அழகு நிறமாய் இருப்பது போல்
குணமாய் இருப்பது இல்லை ...


காற்று வருமா
என இதயம் துடிதுடித்துக் காத்திருக்கிறது ..
காற்று வந்து
செல்வதை
இதயத்திடம் சொல்வதில்லை ..
காற்று வருவது தெரிந்துவிட்டால்
தன துடிப்பை நிறுத்திவிடுமோ ...


மறந்ததை நினைக்க ,
நினைக்க மறந்தேன் ..

No comments: