Monday, November 12, 2012

பட்டாசு ...!



நெருப்பை
தொட்டவுடன்
சத்தமிட்டு அலறுகிறது ..
நெருப்பை உணர்கிறதோ ..?

யுத்தங்களில்
இரத்தமும்
சதையும் தரும்
பரம்பரையில் தவறி வந்து
வீடுகளில் மகிழ்ச்சி தரும் பிறவி நீ..!

அந்த இரத்த வாடை விடாமல் ,
உருவாகையில்
ஏழைகளின்
வயிற்ரேரிச்சலில்
வெடித்துப் போகிறதோ
பட்டாசு ..!


தீண்டாமை யாரும் பார்ப்பதில்லை
உன்னிடம் ,
எழைச்சாதியின்  உழைப்பில் தான்
தீபாவளி சிரிப்பும்
மத்தாப்பும்
பணக்காரசாதியிடம் ..!

குழந்தைகளுக்கு
'காகிதங்கள்
மறைத்திருக்கம்
ஒளியும் ஒலியும்
போக்கே ...!


உண்மையாக
காசை இறுதியில்
கரியாக்கும்
பட்டாசு ..!

1 comment:

Yaathoramani.blogspot.com said...


சிறப்புக் கவிதை
மிக மிகச் சிறப்பு.
வாழ்த்துக்கள்