Friday, July 1, 2016

கடவுள் தூவிய அட்சதை





அவர்கள்
வண்ணமில்லால்
புரியமுடியாமல்
கடவுள் வரைந்த
புதுமை ஓவியங்கள்
...
வளர்ந்தும்
குழந்தையாக ,
பேச்சும்
மழழையாக
...
முழுதாய் வளர்ந்த
பிறை நிலா ,
தனியோர் உலகத்தில்
அவர்கள் உலா
...

எப்போதும் சிரிக்கும்
பிள்ளை ,
சொன்னதை
திரும்பத் திரும்பச் சொல்லும்
கிளிப்பிள்ளை
...

அந்த மாசற்றப் புன்னகையில்
மகிழ்ச்சியில்லை ,
பூவுலகின் துன்பங்கள்
அந்தப் பூக்களுக்கு
புரிவதுமில்லை
...
அவர்கள்
வரமுமில்லாமல்
சாபமுமில்லாமல்
கடவுள் தூவிய அட்சதை
...

No comments: