Thursday, December 25, 2014

என்றும் போல அன்றும் ஒரு நாள்







என்றும் போல அன்றும் ஒரு நாள்
அழகாய் விடிந்தது ,
ஆனால் பூமித்தட்டு
மட்டும் சற்று அதிர்ந்தது ,
கடலும் தன் முகம் மாறி
நிலம் வந்து புகுந்தது ...
அன்று மட்டும்
கடலின் ஒவ்வொரு அலைகளிளும்
ஏனோ கொலைகள் விழுந்தன ,
பல உயிர்கள் மடிந்தன ..
உயிரற்ற உடல்களாக
உயிர் மட்டும் கொண்ட பிணங்களாக
உணவற்ற ஜனங்களாக
உறவற்ற வெற்று மனங்களாக
பல மக்கள் ..
ஆழிபேரலை வந்து ஆனது
ஆண்டுகள் பத்து ,
அதன் துன்பியல் நினைவுகள்
தொலைத்துப் போக முடியாத
சோக சொத்து ..

No comments: