மணல் எடுத்தோம்
நதியை அழித்தோம் ..
செயற்கை உரம் தெளித்தோம்
வயல் வெளி அழித்தோம் ..
அதில் பணக்கார பயிரான
அப்பார்ட்மெண்ட் விதைத்தோம் ..
மேய்ச்சல் போக
புல்வெளி இல்லை ,
குப்பைவெளியில்
மாடுகளும் காகிதம்
திங்க பழகிப்போகிறது ..
போகிப்பண்டிகையில்
பிளாஸ்டிக் கொளுத்தி
பூமிப்பந்தும்
கரும்புகையால்
இரும்பிப்போகிறது ..
நரகாசுரன் அழித்து
தீபாவளி கொண்டாட்டம் ..
விவசாயம் கெடுத்து ,
விவசாயி அழித்தா
நம் பொங்கல் கொண்டாட்டம் ???
பொங்கல் வாழ்த்துக்கள் ..
.jpg)
3 comments:
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :
http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html
பொங்கல் வாழ்த்துக்கள் sir
Post a Comment