Friday, March 21, 2014

ஏரி ..







அமைதியை தன்னுள் நிரப்பி வைத்து
அமைதியாகக் காற்றோடு
சலசலத்துக் கொண்டிருக்கிறது எரி ...

ஊரின் ஓரம்
அழகாக அமர்ந்திருக்கிறது
தவம் செய்யும் ஒரு
முனி போல ..

கடலோடும்
காதலில்லை
அமர்ந்த இடம் தாண்டி
போவதில்லை ..

மண் மீதும்
மழை மீதும்
தீராக்காதல் ..

மண்ணை
மணம் கொண்டு
படிதாண்டாய் ..

பெரு மழையின்
பெருங்காதலில்
மனம் மயங்கி
படி தாண்டி
நிலம் பூண்டாய்
பெருவெள்ளமாய் ..

இரவில்
நிலவின் சிறு
கைக்கண்ணாடியாய் ...

ஊரின் மழை
அத்தனையும் குடிக்க முயன்று
குடிக்க முடியாததை
வெளியே துப்ப முயன்று
தோற்றுப்போய்
தன்னுள் தேக்கி வைத்திருக்கிறது ..

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சொன்ன விதம் ரொம்பவே ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...