Monday, December 15, 2025

குழந்தைகளின் ஜன்னல்

 


குழந்தைகள் கைபிடித்த வாஞ்சையில்

மயங்கி வானில் பறந்துபோன பலூன்

நிச்சயம் சொர்க்கம் சேர்ந்திருக்கும்


குழந்தைகளுடன் கண்ணாமூச்சி 

விளையாடும் பொழுது

முதலில் மறைவது நம் கவலை


சாலையோர அனாதை பொம்மைகளை

வீட்டிற்கு அழைத்து வந்து பெயர் சூட்டி

ஆதரவு அளிக்கிறார்கள் குழந்தைகள்


குழந்தைகளின் 

கிறுக்கல்களும் மழலைச் சொற்களும்

கடவுளின் கையெழுத்தும் மொழியும்


குழந்தைகளின் பக்தி

மெழுகுவர்த்திக்கும்

குத்து விளக்குக்கும்

வேறுபாடு அறியாது


குழந்தைகளின் ஜன்னல்கள்

கதவுகளும் தடுப்புகளும் அற்றவை

அங்கே காற்றுக்கு எந்தத் தடையும் இல்லை



No comments: