Friday, September 18, 2026

தரிசனம்

 


திருவிழா முடிந்த மறுநாள்

யாருமற்ற சந்நிதியில்

கடவுளைச் சந்திக்க

சென்றேன்


கூட்டம் அதிகம் என்பதால்

நேற்று இங்கு வரவில்லை

என்றேன்


நானும் தான்

என்றபடி

புன்னகைத்தார்