எண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...!
திருவிழா முடிந்த மறுநாள்
யாருமற்ற சந்நிதியில்
கடவுளைச் சந்திக்க
சென்றேன்
கூட்டம் அதிகம் என்பதால்
நேற்று இங்கு வரவில்லை
என்றேன்
நானும் தான்
என்றபடி
புன்னகைத்தார்