Friday, May 31, 2013

உணர்ச்சிக் கண்ணாடி







மௌனமாய்ப் பேசும் மொழி
அமைதியாய் இருக்கும் கோபம் 
கண்ணீராய் உருண்டோடும் மகிழ்ச்சி  
சிரிப்பாய்ச் சிதறும் சோகம்  
வெறுப்பாய் வெளிரும் அன்பு  
காதலாய் ஒளிரும்  நட்பு 
காமமாய் சிதறும் காதல் 

காட்சிகளை நேராகக் காட்டும்
தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட
கண்ணாடியாய், 
சில நேரங்களில் 
சில உணர்சிகள்...

Saturday, May 11, 2013

மணல் ...!





நிதிகள்
கற்களைச் சலவை செய்ததில்
அழுக்காய் வந்தன
மணல் ...!

Sunday, April 21, 2013

காகிதங்கள் கொண்ட கோபம் ..!








காகிதங்களும்
பேனாவும்
என் மீது கோபம் கொண்டன ..!


கவிதையை
வடம் பிடித்து வர ,
அவற்றை மறந்து
நான் கணினியில்
பயணம் செய்வதால் ..!


என் கணினி மீது அவை
பொறாமை கொள்கிறது ..
தாய் மருமகள் மீது
கொண்ட பொறாமை போல,
நேற்று வந்த நீ
என் இடத்தை நிரப்பி விட்டாயென ..
எல்லாக் கணவன்களைப் போல்
நானும் இந்தப் பொறாமையை இரசிக்கிறேன் ..!


Sunday, April 14, 2013

நிழல்கள்...!





மரங்கள் யாவும் 
நிலத்தின் மீது 
மயங்கி விழுந்தன- நிழலாக ,
வெயிலின் கொடுமை 
தாங்க முடியாமல் ...!

Thursday, April 11, 2013

குற்றஉணர்ச்சி ...!




யாருடைய கோபமென
தெரியவில்லை ..
என் கண்களை
கலங்க வைக்கிறது இந்தத் தூசி ...!

Saturday, March 9, 2013

இருளோடு பயமேன் ?




கருவறையில்
இருளோடு இருந்தோம்
இருந்தும்
இருளோடு பயமேன் ?

கண்மூடி
இருளோடு கலக்கும் போது
மனதோடு உணர்ந்தோம்
இருந்தும்
இருளோடு பயமேன் ?


இரவில்
உறங்கையில்
வெளிச்சம் வெறுத்தோம்
இருளை அனைத்தோம்
இருந்தும்
இருளோடு பயமேன் ?

கனவு வந்து
அங்கே தன்படம் காட்டும் ..
காதலர்களுக்கு
தனிமையுடன் சேர்ந்து
புது இனிமை கூட்டும் ..
மனைவியின் தலையணை
மந்திரத்திற்கு
தனி ராகம் சேர்க்கும் ..
இருந்தும்
இருளோடு பயமேன் ?

வெளிச்சம்
பூட்டிவைக்கும் ..
புறக்காட்சி
மறைத்துவைக்கும் ..
அகக்காட்சி
திறந்துவைக்கும் ..
இருந்தும்
இருளோடு பயமேன் ?

Sunday, February 17, 2013

மழை....!




காற்றின்
துணைகொண்டு
காலப் பருவத்தின்
வழியே
மேகத்திடம் இருந்து
தப்பித்து வருகிறது
மழைத்துளி ..

வந்த
மழைத்துளி
பிடித்ததால்
தன்னில்
ஒளித்து வைத்துவிடுகிறது
பூமி ..

மழைத்துளிக்கு
பிடித்திருந்ததால்
தங்கிவிடுகிறது
புல்வெளியில் ..

தன்னிடமிருந்து
தப்பித்துவந்த
வந்த மழைத்துளியை
சூரியன் துணைகொண்டு
மீண்டும்
சிறைபிடித்துச் செல்கிறது ..
மேகம் ..