வீட்டில் இருக்கும்
பழைய துருப்பிடித்த குழாய்
யாருக்கும் தெரியா வண்ணம்
அழுதுகொண்டே இருக்கிறது.
வீட்டில் யாருமற்ற வேலையில்
அதன் அழுகை
சத்தமாகக் கேட்கிறது ...
எண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...!
வீட்டில் இருக்கும்
பழைய துருப்பிடித்த குழாய்
யாருக்கும் தெரியா வண்ணம்
அழுதுகொண்டே இருக்கிறது.
வீட்டில் யாருமற்ற வேலையில்
அதன் அழுகை
சத்தமாகக் கேட்கிறது ...
அன்பின் சுவை பழகிய மனம்,
அது வளர்ப்புப் பிராணியின் நாக்கு
அதன் கனவெல்லாம் தன் எஜமானை வருடி விடுவது
அது கடல் அலை
அது செய்வதெல்லாம் விடாமல் ஏதோ ஒன்றைத் தேடுவது
அது மானின் வாய்
அது வேண்டுவதெல்லாம் எப்போதும் அசைபோட ஏதோ ஒன்று
அது மீனின் கண்கள்
அதன் ஆசையெல்லாம் இமைகளற்று எப்போதும் பார்த்திருப்பது
அது நிறைக்க முடியா கிணறு
அதன் தேவையெல்லாம் உள்ளூற ஏற்பது
அது கங்காருவின் மடிப்பை
அதன் வேலையெல்லாம் பாரம் சுமப்பது
அது சிசுவின் பசி
அதற்குப் பார்ப்பதெல்லாம் பால் சுரக்கும் காம்பு ..
சிறு மழை போதும்
உன் நினைவு துளிர் விட
உனைத் தீண்டி அனைத்திட ...
முகம் மோதும் மழையில் உன் முத்தம்
தரை மோதும் மழையில் உன் சத்தம்
புயல் மழையில் உன் கோபம்
மண் நனைத்த முதல் மழையில் உன் வாசம்
அதிகாலை தூறலில் உன் பூமுகம்
பொன்மாலைச் சாரலில் உன் சிநேகம்
உடல் நனைத்த மழையில் உன் தழுவல்
ஆலங்கட்டி மழையில் உன் செல்ல அடி
இப்படி ஒவ்வொரு மழையிலும்
அதன் ஒவ்வொரு துளியிலும்
நீயே இருக்கிறாய்
என் நெஞ்சை நனைக்கிறாய்
எதிர்ப்படும் ஊர்திகள் கடந்து போகிறது
சிலநேரம் அதன் பெருவெளிச்சம்
கண்களைக் குருடாக்குகிறது