Thursday, February 1, 2024

மழை


 

சிறு மழை போதும்

உன் நினைவு துளிர் விட

உனைத் தீண்டி அனைத்திட ...


முகம் மோதும் மழையில் உன் முத்தம்

தரை மோதும் மழையில் உன் சத்தம்

புயல் மழையில் உன் கோபம்

மண் நனைத்த முதல் மழையில் உன் வாசம்

அதிகாலை தூறலில் உன் பூமுகம்

பொன்மாலைச் சாரலில் உன் சிநேகம்

உடல் நனைத்த மழையில் உன் தழுவல்

ஆலங்கட்டி மழையில் உன் செல்ல அடி


இப்படி ஒவ்வொரு மழையிலும்

அதன் ஒவ்வொரு துளியிலும்

நீயே இருக்கிறாய்

என் நெஞ்சை நனைக்கிறாய்

No comments: