Saturday, March 12, 2011

என் விசையிழந்த திசைகள் ..!





என் விசையிழந்த
திசை நோக்கி
பயணம் செய்தேன் ஒரு நாள் ..

அங்கு நான்,
தோல்விகளை
வென்றேன் ..
வெற்றிகளை
தோற்றேன் ..

எதைக் கொண்டாட,
எதை வருத்தப்பட,
என எண்ணி
வருத்தப்பட்டுக் கொண்டாடினேன் ..

அங்கு முயற்சிக்கு
என்றுமே பலனில்லை,
தோல்வியே ஜெயம்
முயற்சி தீவினையாக்கும் ..

என் எதிரிகளின்
கனவுப் பிரதேசம் அது..

என் தசைகளை ருசிக்காமல்
தோல்வியை ருசிக்கும்
பருந்துகளின் சொர்க்க பூமி ..

என் வலிகளையும்
அலறலையும்
இரத்தத்தையும்
உறியும்
காட்டேரிகளின்
உலகம் அது ..

யார் செய்த சூன்யமோ தெரியவில்லை
ஒன்றுமே விளங்குவதில்லை
இந்தத் திசையில் ..!

No comments: