Wednesday, March 2, 2011

ஹைக்கூ -3..!



மெழுகுவத்தி..!

இருட்டில் உன் பயணம் ஒளிப் பெற
நான் உன் வழியில்
தனியாக அழுகிறேன்
- மெழுகுவத்தி ..!

உறவுகள்…!

காதுகளொடும்
வாயோடும்
உறவாடும் –கைபேசி
கண்களோடு உறவாடும் - தொலைக்காட்சி
இதனால் மனிதன் மறந்து போனான்
மனிதனோடு உறவாட ..!

இனிப்பு ..!

இனிப்பை விரும்பும் யாரும்
இனிப்பை விரும்பும் எறும்பிடம்
இனிப்பைப்  போல்
இனிமையாய்
இருப்பதில்லை ..!

இறுதிமுடிவு…!

அந்த நெடுந்தொடரின் இறுதிமுடிவை
எப்படியும் பார்க்க வேண்டும் என்று
உறுதியாய் இருந்த
அந்தக் கிழவியின் இறுதி ஆசையை
இறுதிவரை நிரைவேற்ற முடியவில்லை..!

வாழ்க்கை ரேகை ..!

முதுமை
முகத்தின்
ஒவ்வொரு
சுருக்கங்களிலும் ,
கடந்து வந்த வாழ்க்கை
பாதையின்
சுவடுகள்....!

இரத்தகடிதங்கள்...!

மரத்தின்
இரத்தத்தால்
செய்த
காகிகத்தால்
சில காதல்
கடிதங்கள் ...!

வறுமையின் வாசம் ...!

கோவில் தெருவில்
பூ விற்கும்
சிறுமியின்
வாழ்க்கை மட்டும்
மணப்பதேயில்லை ..!

No comments: