Wednesday, August 24, 2011

தெருவிளக்கு ...!




தெருவின் ஓரம்
ஒற்றையாய் நின்று கொண்டு
இரவில் இருளின் வெளியை 
நிரப்ப முயலும்
தெரு விளக்கின் வெளிச்சத்தில்
இரவின் இருள் 
முழுவதுமாய் மாய்ந்து விடுவதில்லை ..

தெருவிளக்கிலிருந்து சிதறிய
ஒளித் துகள்கள் யாவும்
இருளின் ஒவ்வொரு
புள்ளியின் மையத்திலும்
மோதி ஒரு சிறிய போர்
ஒன்றை நடத்துகிறது ..

போரின் முடிவில்
ஒன்றையொன்று
முழுவதுமாக
வெற்றிக்கொள்வதில்லை..

முழு வெற்றியும் இல்லாத
தோல்வியும் இல்லாத
முடிவில்லா
இப்போர்
ஒவ்வொரு இரவு முழுவதும்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
எல்லாப்  போரைப்போல்,
அமைதியைக் கலைத்துக் கொண்டு ..

இங்கே அமைதியை
கலைப்பது
இருளிடமிருந்து ..

3 comments:

சம்பத்குமார் said...

//தெருவிளக்கிளிருந்து சிதறிய
ஒளித்துகள்கள் யாவும்
இருளின் ஒவ்வொரு
புள்ளியின் மையத்திலும்
மோதி ஒரு சிறிய போர்
ஒன்றை நடத்துகிறது ...! //

கவிதைத் துளிகள்

நன்றியுடன்
சம்பத்குமார்

சம்பத்குமார் said...

நண்பரே..

கருத்தொப்புதலை தயவுசெய்து நீக்கிவிடுங்கள்

கருத்துக்கள் அதிகம் வர வாய்ப்பாக இருக்கும்

நட்புடன்
சம்பத்குமார்

Thooral said...

நன்றி நண்பரே...
நிச்சயம் அதற்கான முயற்சிகள் செய்வேன் ..