Friday, September 2, 2011

மீன்களின் சிரிப்பு ..!







சேது சமுத்திரத்தின்
சாதுவான மீனவர்கள்
திசைமாறிக் கடக்கையிலே
தினசரித் தோட்டாவின் முத்தம்..

சுருக்குக் கயிற்றால்
இறுக்கி அணைப்பு ..

மீன்களை விட வதைபட்டு
பிடிபடும் பாவப் பிறவிகள் ..

கடலில் உப்பின் கணம் கூடுகிறது
எங்கள் கண்ணீரால் ..

புத்த தேசத்து மக்களின்
கீழ்த்தரமான புத்தியால்
வதைபடுகிறோம் ,
கடற்கரையோர கருவாடாய்
மிதிபடுகிறோம் ..

தினசரி சிந்தும் இரத்தம்
கடலோடு கரைந்து
மறைந்து விடுகிறது ..

வலியால் கத்தும் சத்தம் 
காற்றில் மறைகிறது  ..

நாங்கள் பிடிக்காமல் 
விட்டுச்சென்ற மீன்கள்,
எங்களைப் பார்த்து
ஏளனமாகச் சிரிக்கிறது ..

No comments: