என் இறுதிக்கு
ஒரு முடிவு காத்திருந்தது
ஓட்டத்திற்கு ஓய்வாக ..
கருக்கொண்ட நாள் முதல்
ஓயாமல் துடித்தது
சற்று நிற்க இசைந்தது ..
சுற்றி உற்றார் உறவினர் ,
என் தண்ணீரிலிருந்து வந்த சொத்து
கண்ணீரோடு கரைந்திருக்க ,
தன் மீதியை விட்டுச் செல்ல முடியாமல்
கண்ணீர் வற்றி என் பாதி அழுதிருக்க ..
கண்விழித்த நாள் முதல்
காட்சியின் பாரம் சுமந்து ,
உணர்ச்சியின் ஈரம் சுமந்து
கண்கள் கேட்டது விருப்ப ஓய்வு ..
ஆனால் மனமோ
கண்கள் மேல் நோக்கிச் செலுத்தி
ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறது இறுதியாக
அது
ஒரு குரல்
ஒரு வாசம்
ஒரு தீண்டல்
ஒரு முத்தம்
ஓர் ஊடல்
அஃது ஏதோ ஒன்று உறுதியாக ..
தூரத்துக் கைப்பேசியில் அழைப்பொலியாய்
என் விருப்பப் பாடலொன்று ஒலித்தது ..
நினைவுகளின் தாழ்வாரத்தில் ஆயிரம் கதிரொளி
வெளிச்சத்தைத் அது தெளித்தது ..
அப்போது முற்றாக விழிகள் மூடும் நேரம்
கண்களுக்குள் நாற்றாக வந்து நின்றது
அவள் அழகிய பூமுகம் ..
மூடிய விழிகள் திறக்கவே இல்லை
அவள் அழகைக் கண்டு மயங்கி ..
No comments:
Post a Comment