Saturday, March 15, 2014

கடந்து போகமுடியாத தருணம் ...








இதுவும் கடந்துபோகும் என
கடந்து போகமுடியாத
ஒரு தருணத்தை
கடந்துகொண்டிருக்கிறேன் ..

அந்தத் தருணங்கள் யாவும்
தொடங்கியது முதலே மனதில்
வேரூன்றத் தொடங்கி விட்டது ..

அதன் ஒவ்வொரு கணமும்
ரணம் தருகிறது
அந்த வலிகள் யாவும்
புத்தியைக் கிலிப் பிடிக்கவைக்கிறது
புரிந்ததை
புரியாததைப் போல் நடிக்கவைக்கிறது

இறுதியில்
நியூட்டனின் மூன்றாம் விதியின்
தழை கீழ் விதியை
இந்தத் தருணம்காட்டியது ..

சுற்றி இருக்கும்
பிறரின் வாழ்கை மாறிப்போனதால்
அந்தத் தருணங்களை
நான் கடந்து போனதாகத் தோணலாம்

உண்மையில்
நான் அந்தத் தருணங்களை
கடக்கவில்லை
தருணங்கள் தான்
என்னைக் கடந்து சென்றது ..

காலம் கடந்து போனது
காட்சி மறைந்து போனது
மனம் மட்டும் ஏனோ தன்னுள்
தருணங்களை ஆயுள் கைதியாக்கி
எனக்கு உயிரோடு மரணத் தண்டனை விதித்தது

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உலகில் பெரிய தண்டனை...