Tuesday, March 25, 2014

ரௌத்திரம் பழகுவோம்








ஆத்திரம் பிறக்கட்டும்
ரௌத்திரம் பழகுவோம் ..

அரசியல் காட்டில்
ரூபாய் நோட்டு போட்டு
வோட்டு வேட்டையாடும்
மூடர் பாத்திரம் கண்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும்
ரௌத்திரம் பழகுவோம் ..

கொள்கைகளை நோட்டில்
மட்டும் ஏற்றிவைத்து
காந்தியமும்
காந்தி நோட்டில் பூட்டிவைத்து
வீதியெங்கும் கொள்கைவீரர்
பேசும் சாத்திரம் கேட்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும்
ரௌத்திரம் பழகுவோம் ..

கோடிகளை
அந்நிய மண்ணில் விதைப்பார்
ஆட்சி அதிகாரத்தில்
ஊறித் திளைப்பார் ..
நியாங்கள் பேசும்
விசித்திர தலைவர் கண்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும்
ரௌத்திரம் பழகுவோம் ..


ரூபாய் நோட்டுக்கு
கல்வி நோட்டு
தரும் பள்ளிக்கூடம் ..
லட்சங்களை
லட்சியமாய்க் கொண்ட
பல்கலைக்கழகம் ..
கல்வியை வியாபாரமாக்கிய
கல்வித்தந்தைகள் கண்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும்
ரௌத்திரம் பழகுவோம் ..

சாதியம் பேசி
சங்கங்கள் வைத்து
ஓட்டு வங்கி கூட்டி
தங்கள் காரியம் சாதிப்பார்
சண்டைச் சச்சரவுகளை
பெருமையாய் போதிப்பார்
சாதித்தீயில் குளிர்காயும்
வீணர்கள் கண்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும்
ரௌத்திரம் பழகுவோம் ..



3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைக்கு தேவை தான்...

Thooral said...

nandri

Anonymous said...

வணக்கம்

சொல்வது உண்மைதான் இன்றைய நிலையும் இதுதான் ....சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்

நன்றி
அன்புடன்
ரூபன்