மழைப் பொழியும் ஒரு மாலை ,
ஜன்னல் வழியே மழை என்னை
ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது
கையில் தேநீர்க் கோப்பை
அதில் இறந்து போன நினைவுகள்
ஆவியாகிப் பறந்துப் போய்க் கொண்டிருந்தது
கையோடு என் கைபேசி
அதில் நீ அனுப்பிய பழைய குறுஞ்செய்தி ,
வந்து வந்து போனது பொய்பேசி
காதோரம் மெல்லிய பாடல்
கண்மூடி நிற்கையில் ஏதோ தேடல்
தேடல் முடிவில் கண்ணோடு அழகாய் வந்தாய்
நினைவோடு என்னைப்
பல காலம் கடந்து கடத்திச் சென்றாய்
மீண்டும் நாம்
அதே மாலை வேலை
அதே ரயில்வே சாலை
மழைத் தூறும் நடைபாதையில்
நீ எந்தன் கைப் பிடித்துக் கொண்டாய்
தண்டவாளம் பிடித்து நடக்கும்
ரயில் போல் நான் உனைப் பிடித்துக்கொண்டேன்
மழை வேகம் பிடிக்க,
நாம் குடை பிடிக்க ,
காற்று நம் மீது சாரல் தெறிக்க
வேகம் பிடித்த காற்றோடு
குடை கொண்டு சண்டையிட்டுத்
தோற்றுப்போணோம்
மழையில் நனைந்தோம் ,
காதல் மழையில் கரைந்தோம்
காலம் கடந்தது ,
கண்ணீர் மழையில்
காதல் கரைந்தது
ஜன்னல் கண்ணாடியின் வியர்வையில்
உன் பெயரை எழுதி வைத்தேன்
மழை வந்து உன்னைக் களவாடிச் சென்றது
என்றோ மழையென்றால்
ரொம்பப் பிடிக்கும் என
நீ சொன்ன ஞாபகம் ...
ஜன்னல் வழியே மழை என்னை
ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது
கையில் தேநீர்க் கோப்பை
அதில் இறந்து போன நினைவுகள்
ஆவியாகிப் பறந்துப் போய்க் கொண்டிருந்தது
கையோடு என் கைபேசி
அதில் நீ அனுப்பிய பழைய குறுஞ்செய்தி ,
வந்து வந்து போனது பொய்பேசி
காதோரம் மெல்லிய பாடல்
கண்மூடி நிற்கையில் ஏதோ தேடல்
தேடல் முடிவில் கண்ணோடு அழகாய் வந்தாய்
நினைவோடு என்னைப்
பல காலம் கடந்து கடத்திச் சென்றாய்
மீண்டும் நாம்
அதே மாலை வேலை
அதே ரயில்வே சாலை
மழைத் தூறும் நடைபாதையில்
நீ எந்தன் கைப் பிடித்துக் கொண்டாய்
தண்டவாளம் பிடித்து நடக்கும்
ரயில் போல் நான் உனைப் பிடித்துக்கொண்டேன்
மழை வேகம் பிடிக்க,
நாம் குடை பிடிக்க ,
காற்று நம் மீது சாரல் தெறிக்க
வேகம் பிடித்த காற்றோடு
குடை கொண்டு சண்டையிட்டுத்
தோற்றுப்போணோம்
மழையில் நனைந்தோம் ,
காதல் மழையில் கரைந்தோம்
காலம் கடந்தது ,
கண்ணீர் மழையில்
காதல் கரைந்தது
ஜன்னல் கண்ணாடியின் வியர்வையில்
உன் பெயரை எழுதி வைத்தேன்
மழை வந்து உன்னைக் களவாடிச் சென்றது
என்றோ மழையென்றால்
ரொம்பப் பிடிக்கும் என
நீ சொன்ன ஞாபகம் ...
No comments:
Post a Comment