Saturday, August 23, 2025

அன்பை விளக்கும் சொல்



அன்பின் பிரசவம்
எப்பொழுதும் நிகழும் 
 
கருவில் இருக்கும் சிசு
காணும் கனவில்

பிறந்த குழந்தைக்கு
பசி அமர்த்தும் முலையில்

கண்ணீர்த் துளிர்க்கும் முகம் கண்டு
கட்டி அணைத்து குழந்தை தரும் முத்தத்தில்

ஊடலை உடைத்தெறிய பேசாமல் மேசைமேல்
வைக்கப்பட்ட ஒரு தேநீர்க் கோப்பையில்  

இறுதிச் சந்திப்பின் கடைசி முத்தத்தில்
பிரிவின் சுவைக்  கூட்டிய கண்ணீரில்  

இறந்தவரின் கைபேசி எண்ணை
அழிக்கும் போது கைகளின் நடுக்கத்தில்  

தன் எஜமானுக்காக இரயில் நிலையத்தில்
ஆயுள் முழுதும் காத்திருந்த நாயின் கண்களில்

இப்படியாக 
அன்பை விளக்கச் சொற்கள் தேவை இல்லை
சொல்லித்தான் புரியுமெனில் அங்கு அன்பு இல்லை  .. 

No comments: