அன்பின் பிரசவம்
எப்பொழுதும் நிகழும்
கருவில் இருக்கும் சிசு
காணும் கனவில்
பிறந்த குழந்தைக்கு
பசி அமர்த்தும் முலையில்
கண்ணீர்த் துளிர்க்கும் முகம் கண்டு
கட்டி அணைத்து குழந்தை தரும் முத்தத்தில்
ஊடலை உடைத்தெறிய பேசாமல் மேசைமேல்
வைக்கப்பட்ட ஒரு தேநீர்க் கோப்பையில்
இறுதிச் சந்திப்பின் கடைசி முத்தத்தில்
பிரிவின் சுவைக் கூட்டிய கண்ணீரில்
இறந்தவரின் கைபேசி எண்ணை
அழிக்கும் போது கைகளின் நடுக்கத்தில்
தன் எஜமானுக்காக இரயில் நிலையத்தில்
ஆயுள் முழுதும் காத்திருந்த நாயின் கண்களில்
இப்படியாக
அன்பை விளக்கச் சொற்கள் தேவை இல்லை
சொல்லித்தான் புரியுமெனில் அங்கு அன்பு இல்லை ..

No comments:
Post a Comment