Saturday, August 2, 2025

அயல் மகரந்தச் சேர்க்கை

 




கூதிர் காலக் காலையில் மலர்ந்து

கடவுள் சேரும்

கருவறைப் பூ ஒன்று


மலத்தை உரமாய்ச் செரித்துப்

புதராய் மலரும்

கல்லறைப் பூ ஒன்று


அங்கு வந்த ஒரு

வண்டால் நிகழ்ந்தது

அயல் மகரந்தச் சேர்க்கை


அன்பால் விளைந்து

சாதியற்று புதியதோர் வகையாய்

புதிதாய்ப் பூக்கத்தொடங்கியது

ஒரு மொட்டு


புதியதோர் மொட்டு

மலரக் கண்டு சினம் கொண்ட

காவல் கூட்டம்

கல்லறைக் காட்டைக் கொளுத்தியது


தீட்டெனச் சொல்லப்பட்ட

புதியதோர்

மொட்டை கருவறுத்து

பூவைத் தீயில் பொசுக்கியது


தீயில் கருகியப்

பூக்களின் சாம்பல்

காற்றில் பறந்தபடி

தனது காதலைத் தேடத் தொடங்கியது


மீண்டும் ஒரு வண்டு

பூக்களைத் தேடிப் பறந்தபடி

புதியதோர் அயல் மகரந்தச்

சேர்க்கைக்குத் தயாரானது

No comments: