Wednesday, October 12, 2011

பேனாவின் மறதி ..!



எழுத்தொளி தந்து
கரைந்தொளிந்து ,
மனிதன் மனதின்
எண்ண ஓட்டத்தை
காகிதச்சுவரில்
ஒட்டிவிடும் மந்திரக்கோல்
பேனா ..
சில நேரம்
மந்திரகோல்
செயலிழந்து போகும் ..

மந்திரக்கோலையே 
மந்திரம் செய்யும்
வித்தைக்காரன்
சூழ்நிலை ..

இறந்து போன தாய் ;
செய்தி சொல்ல கடிதம்
எழுதும்போதும்  ..

படிக்காத தேர்வு ;
தேர்வறையில்
கேள்வியின்
பதிலை எழுத
முயலும் போதும் ..

யுத்தத்தின் முடிவு ;
எதிரியிடம்
தோல்வியை
ஒப்புக்கொண்டு
கையொப்பம் இடும்போதும் ..

சொல்லாமல் போன காதல் ;
தோழியின் திருமணத்தில்
வாழ்த்து மடலில்
வாழ்த்தும்போதும் ..

அவசரப்பிரிவில்
நேசத்திற்குரியவர் ;
மருத்துவ மனை
அவசரச சிகிச்சைக்காக
கையொப்பம் போடும்போதும் ..

சில நேரம்
வார்த்தைகள்
எண்ணத்தோடு
சண்டையிடும் பொழுதும்
பேனாவிலிருந்து
வெளிவர மறுத்தன
வார்த்தைகள் ..

2 comments:

மதுரை சரவணன் said...

//சில நேரம்
வார்த்தைகள்
எண்ணத்தோடு
சண்டையிடும் பொழுதும்
பேனாவிலிருந்து
வெளிவர மறுத்தன
வார்த்தைகள் ...!//

arumai....vaalththukkal

Thooral said...

@மதுரை சரவணன்
கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ...