Friday, October 21, 2011

கண்ணீரின் எழுத்துக்கள் ..!





சில எழுத்துக்கள்
படித்தாலே புரிந்துவிடும்
அவை கண்ணீருக்கு
சொந்தமென ..

மனித உணர்ச்சியால்
உண்டான கிளர்ச்சியால்
உண்டான கண்ணீர் பிரசவிக்கும் 
எழுத்துக்கள் யாவும் உணர்ச்சியின் பாரம் தாங்க முடியாமல்   
சோகத்தின் நிழலில் ஓய்வெடுக்கிறது  ..

அந்த எழுத்துக்களை
படிக்கும் ஒவ்வொரு நொடியும் ,
எழுத்துக்களுக்கு
சொந்தமான கண்ணீரின் ஈரம்
நெஞ்சில் பிசுபிசுக்கும் ..

8 comments:

Yaathoramani.blogspot.com said...

பன்னீர் மையூற்றி எழுதப்பட்ட படைப்புகள் எல்லாம்
எழுதிய சில நொடிகளில் காற்றில் கரைந்து விட
கண்ணீர் மையூற்றி எழுதப்பட்டவைகள் எல்லாம்
காலம் கடந்த படைப்புகளாக பரிமளிப்பதே
தங்கள் கருத்துக்கு அத்தாட்சி
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

Unknown said...

சோகத்தின் வார் படத்தைச்
சொல்லுகின்ற கண்ணீரே
வேகத்தின் அளவுதனை
வேறுபடக் காட்டுமய்யா

கவிதை அருமை!

த ம ஓ 2

புலவர் சா இராமாநுசம்

SURYAJEEVA said...

காய்ந்து போன கண்ணீரின் சுவடுகள் வரிகளாய் இந்த பக்கங்களில்

மகேந்திரன் said...

உலர்ந்துபோன நினைவுகளாய்
ஈரவிழிகள் எழுதும் அழகிய
உணர்வுள்ள கவி.

Thooral said...

@Ramani ...
தங்கள் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...

ஜெயராம் தி

Thooral said...

@புலவர் சா இராமாநுசம்...

புலவர் ஐயா ..
தங்கள் முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...

ஜெயராம் தி

Thooral said...

@suryajeeva ...

தங்கள் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே ...

ஜெயராம் தி

Thooral said...

@மகேந்திரன்...

தங்கள் முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...

ஜெயராம் தி