Saturday, April 3, 2010

சித்திரை….!

வந்தது சித்திரை
அது வரும் கோடையின் முத்திரை..

பள்ளிகளுக்கோ விடுமுறை
மாணவர் நெஞ்சில் இன்ப அலை..

சித்திரையின் இறுதியில் வருவான்
கதிரவன் கத்திரியாக..

நீரின் உண்மையான சுவை அறிந்தோம்
உந்தன் வெப்பத்தாலே..

இது வெயிலின்
வசந்த காலம்..

குளிரின்
இறந்த காலம்..

தென்றலும்
வெப்பத்தில் வாடும்..

இக்காலம்
வெறுத்தாலும் ,
நாம் மறுக்க முடியாது
இது மழை உண்டாக்கும் மேகங்களின்
தேனிலவு என்று..

No comments: