Monday, July 25, 2016

பின்தொடரும் கனவின் குரல்..








கனவின் நாயகன்
கண்ணுறங்கி போனான்
விதையாய் மாறியே
மண்ணுறங்கி போனான்
...
கனவு காணக் கற்றுத் தந்தவன்
கண்மூடும் வேளையிலும்
எங்களுக்கு வழிகாட்டிச் சென்றான்
...
ஊழல் தேசத்தில் பிறந்தோமே
எனக் கூனிக் குறுகி நிற்கையில்
நம்பிக்கை ஒளி ஊட்டிச் சென்றான்
...
உறங்காமல் கனவு காண
கற்றுகொண்டோம் உன்னிடம்
இன்று நீ ஏன் உறங்கி மறைந்து
போனாய் விண்ணிடம்
...
அறிவியலில் சிகரம் தொட்டவர்
ஆயிரமுண்டு ,
உன் போல் எங்கள்
இதயம் தொட்டவர் யாருமுண்டா ?
...
விடிவெள்ளி நீ மறைந்தாலும்
உந்தன் வெளிச்சம் மட்டும்
இதயத்தில் என்றுமுண்டு
...
உன் இரு கண்கள் கண்டது
பல கோடி மக்களின் கனவு ,
எங்கள் ஒவ்வொருவர்
இதயத்திலும்
பின்தொடரும்
உந்தன் கனவின் குரல்
...

Friday, July 1, 2016

கடவுள் தூவிய அட்சதை





அவர்கள்
வண்ணமில்லால்
புரியமுடியாமல்
கடவுள் வரைந்த
புதுமை ஓவியங்கள்
...
வளர்ந்தும்
குழந்தையாக ,
பேச்சும்
மழழையாக
...
முழுதாய் வளர்ந்த
பிறை நிலா ,
தனியோர் உலகத்தில்
அவர்கள் உலா
...

எப்போதும் சிரிக்கும்
பிள்ளை ,
சொன்னதை
திரும்பத் திரும்பச் சொல்லும்
கிளிப்பிள்ளை
...

அந்த மாசற்றப் புன்னகையில்
மகிழ்ச்சியில்லை ,
பூவுலகின் துன்பங்கள்
அந்தப் பூக்களுக்கு
புரிவதுமில்லை
...
அவர்கள்
வரமுமில்லாமல்
சாபமுமில்லாமல்
கடவுள் தூவிய அட்சதை
...

Thursday, December 25, 2014

என்றும் போல அன்றும் ஒரு நாள்







என்றும் போல அன்றும் ஒரு நாள்
அழகாய் விடிந்தது ,
ஆனால் பூமித்தட்டு
மட்டும் சற்று அதிர்ந்தது ,
கடலும் தன் முகம் மாறி
நிலம் வந்து புகுந்தது ...
அன்று மட்டும்
கடலின் ஒவ்வொரு அலைகளிளும்
ஏனோ கொலைகள் விழுந்தன ,
பல உயிர்கள் மடிந்தன ..
உயிரற்ற உடல்களாக
உயிர் மட்டும் கொண்ட பிணங்களாக
உணவற்ற ஜனங்களாக
உறவற்ற வெற்று மனங்களாக
பல மக்கள் ..
ஆழிபேரலை வந்து ஆனது
ஆண்டுகள் பத்து ,
அதன் துன்பியல் நினைவுகள்
தொலைத்துப் போக முடியாத
சோக சொத்து ..

Sunday, December 21, 2014

நான் யார்





நான் யார்?

தான் ஒரு முட்டாள்
என்ற உண்மையை உணர்ந்த புத்திசாலி

பல நினைவுகளை மென்று தின்று
அதைச் சீரணிக்க முடியாமல்
இன்னும் மென்றுகொண்டிருப்பவன் 

சில கவிதைகள் போல் சமயங்களில்
எத்தனை முறைப் படித்தாலும் புரியாதவன் 

சோம்பலை துரத்தித் துரத்தி
காதலிப்பவன்

இணையத்தில் மட்டும்
அநியாயம் கண்டு பொங்கும் போராளி 

எண்ணங்களை வார்த்தைகளில் நாட்டியமாட 
பயிற்றுவிக்கும் பயிற்சியாளன் 

தன் மன-சன்னலை
சில கொசுக்களுக்குப் பயந்து சாத்திவைப்பவன் ,
ஆனால் காற்றும் வருவதில்லை ..

Wednesday, November 5, 2014

தவிப்பு ..!






பகலுடன்
ஓய்வெடுக்க
விடியலுக்காக
இரவெல்லாம் காத்திருக்கிறது
இருள்  ..

இரவுடன்
சேர்ந்துரங்க
இரவுக்காக
பகலெல்லாம் காத்திருக்கிறது
வெளிச்சம் ..

இரண்டும்
ஒன்றை ஒன்று சந்திக்கையில் ,
ஒன்றோடு
மற்றொன்று
தொலைந்து போகிறது ..
காத்திருப்பும்
தவிப்பாய்
தொடர்ந்து போகிறது ..

Friday, September 12, 2014

நிறம் மாறிய நிமிடங்கள்…







சில உண்மைகளின் உண்மை முகம்
பொய்யெனத் தெரிகையில் ,
நான் கடந்து வந்த தருணங்களை
என்னைக் கடந்து போன தருணங்களாக உணர்கையில் ,
மணமேடையில் வேற்றொருவனுடன்
அவளைக் கண்ட ஒற்றை நொடியில் ,
துரோகம் என் முகத்தில்
கருமை நிறம் பூசிய அந்த நொடியில் ,
பணமெனும் கண்ணாடியில்
உறவுகளின் உண்மை குணம் காண்கையில் ,
கடந்துவந்த, கடந்துபோன
காதல், பாசம், நட்பு, மனிதம்
எனப் பல நிமிடங்களின் நிறம் மாறிப்போகிறது..

அலைகளாக மனதின் எண்ணங்கள்
அதன் கரைகளாகக் காலங்கள் ..
போகிறபோக்கில் கரைகளின் வண்ணங்களை
அலைகள் அடிக்கடி மாற்றிப்போகிறது..

Tuesday, September 9, 2014

மிருகங்கள் ஜாக்கிரதை ...







வயிரின் பசித் தீர்க்க
உடலை வேட்டையாடும் மிருகங்கள்
காட்டில் உண்டு ..
காமப்பசித் தீர்க்க
உடல் வேட்டையாடும் மனித - மிருகங்கள்
இங்கு நாட்டில் உண்டு ..

மது உண்டு - மதி கெட்டு
குடி உண்டு - குடி கெட்டு
விழியிருந்தும் குருடாகி
போலியாய் முரடாகி
காமப் பசித் தீர்க்க
வேட்டையாடப் போகிறது மனித மிருகம் ..

பெண்பால் வேட்டையாடும்
மிருகம் மறந்து போனது
தான் தாய்பால் ருசித்தது
ஒரு பெண்பாலிடம் என்று ..

கருவில் இருந்தாள்
-சிசுவை அழித்தீர் ..
குழந்தையைக் கூட ,
ருசிக்குப் புசிக்க நினைத்தீர் ..

ஏனோ பெண்ணை மட்டும்
கருவறை முதல் பிணவறை வரை
நிம்மதியாய் விட்டு வைக்கவில்லை ...